பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ்ர் வரலாறு

 களை, அழிவுகாலம், அணுகிவிடும் என்பதை அறிந்து கொள்வாயாக" எனக் கூறியிருந்தது. (அஹம் து நகரீ லங்கா ஸ்வயமெவ ப்லவங்கம / நிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமெண ம ஹா பல / இதம் க தத்ஹயம் ஸ்குனு மெ ப்ருவான்த்யா வை ஹரீஸ்வர / ஸ்வ்யம் ஸ்வயம்ப் ஹூனா தத்த வரதானம் யத்ஹா மம /

யதா த்வாம்வானரஹ் களிசித் விக்ரமாத் வஸம் ஆனயெத்/ததா த்வயா விஜ்ஜெயம் ரக்ஸஸாம் ப்ஹயமாகதம். ராமாயணம் : 5 : 3 : 45.47) தென் இந்தியச் சிற்றுார்கள் ஒவ்வொன்றும், குறிப்பாகக், கல்வி செல்வ நிலைகளில் தாழ்ந்திருப்போரால் வழிபடப்படுவதும், உயர்சாதியின்ரால், சிறந்த தாய்க்கடவுளாம் துர்க்கையின் பல்வேறு உருவெளிப்பாடுகளாகக் கருதப்படுவதும் ஆகிய, எல்லையம்மன் என்ற எல்லைக்காவல் தெய்வம் ஒன்றை இன்றும் கொண்டுள்ளன.
தலைநகருள் நுழையும் அனுமான், களிப்பூட்டும் காட்சி அரங்குகளுக்கிடையே "தாருபர்வத்ம்" அல்லது பட்டுப் போன மரத்துண்டுகளின் குன்று நிகர் குவியல்களைக் கண்டான். திரு. ராமதாஸ் பந்துலு அவர்கள், "விசாகப்பட்டிணம் மாவட்டத்தின் சமஸ்தானச் சிறு நிலப்பரப்புகளில், தாரு என்ற சொல், எரிபொருள் எனும் பொருள் தருவதாக உணரப்படுகிறது. எரிபொருள்கள், சிறு குன்றுகள் போலவும் கோயில் கோபுரங்கள் போலவும் சேர்த்து வைக்கப்படுவது, எங்கும் காணக்கூடிய ஒன்று. இம் மலைப் பகுதிகளில், மழை, மிகப் பெருமளவில் பெய்யுமாதலால், காய்ந்த சிறு மரத்துண்டும் கிடைக்காதபோது, அப்பருவ விளைவுக்கு எதிராக, அவைபோலும் பெரும் போர்கள் தேவையாகிவிட்டன. அனுமான் இலங்கைக்கு மாரிகாலம் கழித்துச் சென்றான். ஆதலின், வானரத்துாதுவன், இராவணன் வாழிடத்திற்கு அணித்தாக, இவைபோலும், மரக்குவியல்களைக் கண்ணுற்றதில், வியப்பேதும் இல்லை. (இராமாயணம் 5 : 6 : 36)
திரு.ராமதாஸ் பந்துலு அவர்கள் குறிப்பிடும் மற்றொரு கூற்றும் ஈண்டும் குறிப்பிடத்தக்கது, "இராவணன் போருக்குச்