பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும் தென் இந்தியாவும்

35

 சென்றபோது, புலி, குதிரை, ஒட்டகம், கலைமான் போலும் முகங்களிையுடைய சிலவும் உடன் சென்றன. (ய்ஸ்னக்வ நாநா வித்ஹ க்ஹொர் நலிபர் வ்யாக்ஹரொ ஹ்ஷ்ர நாகெந்த்ர ம்ற்காஸ்வ, வக்த்ரஹ் | ப்ஹூதனதர்வ்ஹதொ ப்ஹாதி, விவற்ப்த்த நெத்ரைஹ் கொஸென சுரானாமபி தர்பஹன் தா| (இராமாயணம் : 6 : 59 : 24) இந்தப் பூதங்கள், மேலே கூறிய விலங்குகளின் முகம் போலும் முகமூடிகளை அணிந்த ராக்க்ஷதர்களாவர். தண்டகாரண்யத்தில் அமைதி வாழ்வு நடத்தி வருபவர்களையும், போரில், தங்கள் பகைவர்களையும் அச்சுறுத்த ராக்க்ஷதர்கள் கையாளும் பல்வேறு முறைகளில் இதுவும் ஒன்று. ஆரியர்களோடு போராடிய வடஇந்திய தஸ்யூக்களும், இவைபோலும் முறைகளைக் கையாண்டனர். மாயாஜால முறைகளைக் கையாளுவதில் புகழ் பெற்றவர் என்பது பொய்யன்று : மெய்யே, (ப்ர மாயினாம் அமினாத் வர்பனிதிஹ் - “மாந்திரிகரின் சூதுவாது நிரம்பிய தலைவனை எளியோர் வளர்க்கின்றனர். ரிக்வேதம் (திரு. கிரிப்த் பதிப்பு) III : 34 ; 3.

மாயாவான் அப்ரஹ்மா தஸ்யுஹ் - மந்திரவாதி. வழி பாடு இல்லாத தஸ்யூ' (ரிக்வேதம் : 4 : 16-9) ஸுஸ்னஸ்ய மாயா - சுஸ்ஸ்னன் 'மாயாஜாலம் - (ரிக்வேதம் 5:-31-7) 'அஹிர்மா யஸ்ய பாம்புகளின் இழி தன்மையினை உணர்ந்த ஒருவன் 6 : - 20 - 7. 'அதெவீஹ் மாயாஹ் மாயாஜாலத்தின் கடவுள் அற்ற கலை”. (ரிக்வேதம்- 1-10) கூயி இனத்துப் பழங்குடியினரும் கொடு விலங்குகளின் முகங்கள் போலும் முகமூடிகளை அணிந்து கொள்வது காட்டெருமை, கலைமான்களின் கொம்புகளைத் தலையில் அணிந்து கொள்வது ஆகிய வழக்கங்களைக் கொண்டுள்ளனர். தொடக்க்த்தில், போருக்குப் பயன்படுத்தப் பட்ட இவ்வழக்கங்கள் இப்போது ஆடல் பாடல் போலும் இன்பக் கேளிக்கைகளுக்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கோந்து இனத்தவரின் போருடை, காண்பவர் உள்ளத்தில் அச்சத்தை உள்ட்ட எண்ணிக், காட்டெருமைகளின் கொம்புகள், கானமயில்களின் இறகுகளைக் கொண்டு வகை செய்யப்பட்டு