பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.மு இரண்டாவது ... தமிழர் நாகரீகம் 107 சமுதாய மரபுகளால் தடுக்கப்படவில்லை: கண்டதும் கொண்ட காதலைத் தொடர்ந்து உடனடிக் கூடலே அக்கால வாழ்க்கைச் சட்டமாம். குலமுறைப்படியான விருந்து பின் தொடர மணந்த இருவரைப், பொதுமக்கள் வரவேற்கும் திருமணவிழா, மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது. ஆனால், மன விழாவிற்கு முந்திய காலாகாலமாக இருந்துவரும் வழக்கமாம். களவுக்காதல் ஒழுக்கம், மலைநாட்டுப் பழங்குடியினரிடையே, இக்காலத்தும் இடம் பெற்று இருப்பதுபோல், கைவிடப்படாமல் அவ்வாறே கடை பிடிக்கப்பட்டது. மலைநாட்டு ஆடவரும் பெண்டிரும், குறைந்த ஆடையில் நிறைவு கண்டனர். மனிதனை மறைக்க, கழுத்திலிருந்து தொங்கும், எண்ணற்ற கிளிஞ்சல் சரடுகள் (பிற்காலத்தில் அரைக்கச்சை அணியாம் மேகலை தோன்று வதற்குக் காரணமாய் அமைந்த) மலர்களாலும் இலை களாலும் ஆன மாலைகள், இவையே போதுமானவையாயின. குறிஞ்சி நாட்டு உட்பகுதியில் வாழும் குறவரிடையே, இந்த ஆடை கைவிடப்படாமல் இன்றும் உளது; இக்குறவர் மலைகளிலிருந்து இறங்கிக் கீழ்நாடுகளுக்கு வரும்போது, உடை வகையில் மேற்கொள்ளும் ஒரே மாற்றம், மலர்களாலும், இலைகளாலும் ஆன அரைக்கச்சைக்குப் பதிலாகக் கிழிந்த, துணியின் சிறு துண்டை மேற்கொள்வது ஒன்றே. குறவ ரிடையே பாக்கள் முதல்முதலில் எழுந்தபோது, பாவாணர்கள் மலைநாட்டுத் தலைவர்களின், புணர்ச்சிக்கு முந்திய கள்ளக் காதலை, அவர்கள், தங்கள் - காதலியர்க்குத், தழை உடை எனப்படும் இலை ஆடைகளையும், அம்மலை நாட்டுத் தலைவர்கள் வேட்டையில் கொன்ற புலிகளின் பற்களையும் கொடுப்பதையே இயல்பாகப் பாடினர். இப்பற்கள், மாலையாகக் கோக்கப்பட்டு, கழுக் திலிருந்து தொங்க அணியப்பட்டு, புவிப்பல் தாலி என அழைக்கப்படும். (புவிப் பல்லால் செய்யப்பட்டு, மணம் ஆவதற்கு அறிகுறியாகக் கழுத்திலிருந்து தொங்கும், இப் புவிப்பல் தாலி, இளஞ். சிறுவர்களாலும் அணியப்பட்டது) பிற்காலத்தில், இதிலிருந்தே பொன்தாலி உருப்பெற்றது. பிற்காலத்தில்