பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ... தமிழர் நாகரீகம்

123

நிலையில் அண்டை நிலத்துச் சிறந்த ஆடவர், தங்கள் காதலியராம் அம் மகளிரைக் காண்டல் விருப்போடு, தங்கள் வண்டிகள் அல்லது தேர்களில், கடற்கரைக்கு வந்து செல்வர் என்பதைப், பிற்கால இலக்கியங்களில் படிக்கிறோம்.

ஏனைய நிலப்பகுதிகளிலும், நாகரீகம் நனிமிக வளர்ந்து விட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில், களவுக்காதல், கற்புக்காதலுக்கு வழிவகுத்துவிட்டது. தமிழர்களிடையே இடம் பெற்றுவிட்ட, ஆரியர்களால் திருத்தப்படுவதற்கு முற்பட்டதான, பழைய திருமணச் சடங்குமுறை, அகநானுாறு என்ற தொகை நூலைச் சேர்ந்த இரண்டு செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளது. உழுத்தம் பருப்புக் கலந்து நன்கு குழையச் சமைத்த பொங்கலோடு, பெரிய சோற்றுக் குவியல், பலரும் உண்ட பிறகும் குவிந்து கிடக்கிறது. வரிசையாகக் கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தலின் கீழ், புது மணல் பரப்பப்பட்டுள்ளது. மனைவிளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மணமக்கள் மாலைகளால் அணி செய்யப்பட்டுள்ளனர். தீயன விளைவிக்கும் கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற, வெண் பிறைத் திங்கள், சிறந்த புகழ் வாய்ந்த உரோகிணி எனும் நாளோடு கூடிய அந்த நல்ல நாளில், இருள் அகன்ற விடியற் போதில், திருமண ஆரவாரத்தில் மூழ்கிவிட்ட முதிய மகளிர், தலையில் கொண்ட குடங்களிலும், கையிற் கொண்ட பண்டங்களிலும் நீரைக் கொண்டுவந்து, வரிசையாகக் கொடுக்கக் கொடுக்க, மகப்பேறு பெற்று மாண்புடைய துாய அணிகள் அணிந்த மகளிர் நால்வர், கற்பு நெறி வழுவாது, நல்ல பல பேறுகளையும் பெற்றுத்தந்து, கணவனைப் பேணும் அன்புடையை ஆகுக' என வாழ்த்தியவாறே, அத் தண்ணிரால் குளிப்பாட்ட, அந்நீரோடு கலந்து சொரியப்பட்ட நெல்லும் மலரும், மணமகள் கூந்தலில் கிடந்து சிறக்க, திருமணச்சடங்கு இனிதே முடிவுற்ற பின்னர், அன்று இரவு, தமரகத்து மகளிர் எல்லாம் ஒன்று கூடியிருந்து, மணமகளுக்குப், புதுக் கூறை உடுத்திப் பெரிய மனைக்கிழத்தி ஆகுக என வாழ்த்தி, அவள் காதலனோடு ஒர் அறைக்குள் அனுப்பி