பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழர் வரலாறு

வைத்தனர். அவளும் நாண் தரு நடுக்கத்தோடு உள்ளே நடந்தாள்”.

“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை,
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக்கு உறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்,
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வன் பயந்த திதலைஅவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்,
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்,
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுஎன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி,
பல்லிருங் கதுப்பில் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் கம்மையர் ஞெரேரெனப் புகுதந்து
“பேரிற் கிழத்தி ஆகு” எனத் தமர்தர
ஒரில் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக்
கலிங்கத்து ஒடுங்கினள்.”
-அகநானூறு : 86: 1-22


கூறிய இப்பண்டைத் தமிழ்த் திருமணச் சடங்கு முறையில், ஆரியக் கலப்பு எதுவும் அறவே இல்லை. தீ ஒம்பல் இல்லை. தீ வலம் வருதல் இல்லை. தகவிணை வாங்கப் புரோகிதர் இல்லை என்பது உணரப்படும். அதே தொகை நூலில், மற்றொரு செய்யுளும், திருமணச் சடங்கு முறையினைக் குறிப்பிடுகிறது. இறைச்சி கலந்து நெய் மிதக்க ஆக்கிய வெண்சோற்று உணவு, வரையா வண்மையொடு பெரியவர்களுக்கு வழங்கப்பட்டது. பறவைகள் உணர்த்திய நிமித்த