பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழர் வரலாறு

ஆதலின், ஆற்றுப் பள்ளத்தாக்குக் கடவுளை, வேந்தன் என்று அழைக்கின்றார்: கடல் தெய்வத்திற்கு வருணன் எனச் சமஸ்கிருதப் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடல் தரும். பின் இரண்டின் தமிழ்ப் பெயர்கள் திரும்பக் கிடைக்க வில்லை போலும் ; அவை, முறையே, சேயோன், கடலோன் என்பனவாகலாம், தொல்காப்பியனார், மக்கள் நிலையாகக் கூடிவாழும் நிலப்பகுதிகளின் பட்டியலில் பாலையைச் சேர்க்க வில்லையாகவே, அப்பாலைக்குரிய கடவுள் பெயர் குறிப்பிட வில்லை.

வட இந்தியாவில் ஐந்து பழங்குடி இனங்கள் :

இவ்வைந்து வகையான மனித நாகரீகம், தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவில், பழங்காலத்தில், அதாவது, வேதங்களும், வேத மந்திரங்கள் இயற்றப்படுவதற்கு நிலைக்களமான தீ வழிபாட்டு முறைகளும் எழுவதற்கு முற்பட்ட காலத்தில், வளர்ந்திருக்க வேண்டும். ஆரிய நாகரீகம் தோன்றுவதற்கு முன்பு, வட இந்திய தஸ்யூக்கள், தென்னிந்திய தஸ்யூக்களைப் போலவே, அதே ஐந்து இனத்தவர்களையும் பிரிந்திரிக்க வேண்டும், வட இந்தியா, தென்னிந்தியாவைப் போலவே அதே ஐந்து, இயற்கையோடியைந்த நிலப்பிரிவுகளாகப் பிரிக்கப் படக் கூடியதே ; ஆனால், ஒன்று, அவை தென்னிந்தியப் பிரிவுகளைக் காட்டிலும் பரப்பளவில் பெரியனவாம். அங்கு, அதே நிலஇயல் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆகவே அதே விளைவுகளுக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் கடவுளின் வாய், தீ : ஆகவே கடவுளுக்குப் படைக்கும் அனைத்தும், கொழுந்துவிட்டு எரியும் தீக்கடவுளின் வாயில் இடுதல் வேண்டும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீ வழிபாட்டு நெறி, வடஇந்தியாவில், ஏறத்தாழ, கி.மு. 4000இல் உருவாகிவிட்டது. இவ் வழிபாட்டு நெறி, ஆரிய வழிபாட்டு நெறி என அழைக்கப்பட்டது. தீ இல்லா வழிபாட்டு நெறியினைப் பின்பற்றிய பழங்குடியினர், தஸ்யூக்கள் எனப்பட்டனர். தீ வழிபாட்டு முறையினைப்