பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கி. மு. இரண்டாவது .... தமிழர் தாகரீகம்

129


பின்பற்றுவோர், தங்கள் படையலைத் தொடர்ந்து, தனிவல்ல பார்ப்பனராம் ரிஷிகள் இயற்றிய மந்திரங்களை ஒதும் முறையினை மேற்கொண்டனர். சமஸ்கிருத மொழி எப்படி, எப்போது உருவாயிற்று? யார் இந்த ரிஷிகள் என்பன கண்டுபிடித்தற்கு இயலா. நமக்குத் தெரிந்த ஒரே உண்மை, சொல் அமைப்பிலும், சொற்றொடர் அமைப்பிலும், அது மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பெருநிலப்பரப்பில் பேசப்பட்டுவரும் மொழிக்ளோடு உறவுடையதாம் என்பது.

இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டும், இனத்திற்கும் மொழிக்கும் இடையிலான வேறுபாட்டினை உணர மாட்டா. வடிகட்டிய அறியாமையால் தூண்டப்பட்டும் மனித இயல்நூல் தன் முழு எதிர்ப்பையும் தெரிவிக்கும் ஆரியர்களின், உலகக் குடிபெயர்ச்சி என்ற தத்துவம் உருப் பெற்றது. ஆனால் வடநாட்டில், ஆரிய நாகரீகம் எழுவதற்கு முன்னர், வாழ்ந்திருந்த மக்கள் வாழ்க்கை முறையினை, ஆரிய நாகரீகத் தோற்றம் எவ்வாறு மாற்றிவிட்டது என்ற வினாவிற்கு, விடை காண்பது ஒன்றே ஈண்டு நம்முடைய நோக்கம்.

அத்தொல்லூழிக்காலத்தில், தங்கள் தமிழ் உடன் பிறப்பாளர்களைப் போலவே, வடஇந்திய தஸ்யூக்களும், அவ்வந்நிலத் தெய்வங்களையே வழிபட்டிருக்க வேண்டும். ஆரியத் தீ வழிபாட்டு நெறி, இந்த உள்நாட்டுக் கடவுள்களைத் தங்களுடையனவாக ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தங்களுடைய புது நெறிப்படி, வழிபட்டதா? இது பற்றி ஆராய இது இடம் அன்று. அத்தொல்லூழிக்காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இந்த ஆரிய வழிபாட்டு நெறி, தென்னிந்தியாவுக்குக் , குடிபெயர்ந்தபோது, தென்னிந்திய உள்நாட்டுக் கடவுள்களாக, சேயோன் சுப்பிரமணியனாக, மாயோன், விஷ்ணுகிருஷ்ணனாக, கடல் தெய்வம், வருணனாக, கார்மேகக் கடவுள் இந்திரனாக, பாலைத் தெய்வம் துர்க்கையாக மேற்கொள்ளப்பட்டு

த.வ.-9