பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழர் வரலாறு

போலவே கோலம் கொள்வதும், ஒருவகை உள்ளார்ந்த வழிபாடாகும். ஆதலின், வழிபடுவாரின் முகம், படம் விரித்தாடும் பாம்பு போல் காட்சி தரும் வகையில், நாக வழிபாட்டாளர்கள், தங்கள் தலைமயிரைக் கோதி, தலை உச்சியில் ஒன்று சேர்த்து, முடி நிமிர்ந்து நிற்குமாறு முடி போட்டுக் கொள்வர் என நான் நம்புகிறேன். இந்த முறையில் அழகுசெய்யப்பட்ட தலைமயிர் கொண்ட, தென்னிந்தியர்களை நான் பார்த்ததிலிருந்து, பண்டைய நாகர்கள் தங்கள் தலைகள், தாங்கள் வழிபடும் நாகம் போலச் செய்துகொள்ள முயற்சித்தனர் என உய்த்துணர்கின்றேன். இத்தகு மக்களிடையே, மயிர்வழுக்கை வழக்கம் புகுத்தப்பட்ட போதும் கைவிட முடியாத அளவு, மிகமிகப் பழமையானது, அதனால் மிகவும் புனிதமானது என்பதால், தலை உச்சியில், சிறுமுடி எடுக்கப்படாமல், இன்றும் விடப்படுவதற்கு இதுவே விளக்கமாகக் கூடும். இந்நாகரிக முறையை, நாயர்கள், இன்றும் கொண்டிருப்பதால், அவர்கள், பெரும்பாலும், பழைய நாகர்களின், இன்றைய பிரதிநிதிகளாவர். பரசுராமனின், குடி அல்லது ஆன்மீக வழியில் வந்தவர்களிடமிருந்து ஆரிய நாகரிகத்தை, முதன்முதலில் ஏற்றுக் கொண்ட நாகர்கள், நம்பூதிரிகள் என்றும் நான் முடிவு செய்கின்றேன்.

மலபாரைச் சேர்ந்த நம்பூதிரிகள், தென்னிந்திய பிராமணர்களின், மிகப் பழைய சமுதாயப் பிரிவினராவர் என்பது, திருவாளர், கே. ராமவர்மராஜா அவர்களின் கட்டுரையில் காணும் பின்வரும் உண்மைகளாலும், உறுதி செய்யப்படுகிறது.

1, நம்பூதிரிகளில் பெரும்பாலான யஜூர்வேதிகள், பெளதாயன, மற்றும், பாதூலக வழியைச் சேர்ந்த மிகப் பழைய சூத்திரர்கள்.

2. முதல் மூன்று வேதங்கள் மட்டுமே, அவர்களிடையே பழக்கத்தில் உள்ளன. ஆகவே, அவர்கள், வேதவரிசையில், அதர்வவேத சமிதா இணைவதற்கு முன்பு, அதாவது.