பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழர் வரலாறு

களால் நனி மிகப் பழங்காலத்திலிருந்தும், அளிரியர்களால் அதனினும் பிற்பட்ட காலத்திலிருந்தும் அறியப்பட்டது என்கிறார் திருவாளர் குட்சைல்டு (Good Child) என்பார்.

“சலாமிஸ்ஸின் (Salamis) மதகுருவாம் எபிபணியாஸ் (Epiphunias) என்பார், மோஸ்ஸுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீல மணிக்கல்வில்தான் செதுக்கப் பட்டன எனக் கூறுகிறார்”. [Scoffs’ periplus page : 171 ] நார்மடி ஆடைகள் எகிப்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற்போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக் கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள், இந்திய மஸ்ஸிலினால் தைக்கப்பட்டவையாம். வாலில்லாக்குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகியவை பொருத்தமட்டில், பத்தாவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட இருப்பதுபோல், ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்பொருள்களும், இவற்றிற்கு இனமான பொருள்களும், மேலை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. ஆதலின், இறக்குமதி செய்யப்பட்ட இப்பொருள்கள் அனைத்தும் இல்லையாயினும், இவற்றில் ஒரு பகுதி, இந்தியாவிலிருந்து வந்தனவாம் என்பதில் சிறிது உண்மையிருக்கிறது. லவங்கப் பட்டையைப் பொருத்தவரை “கி. மு 15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அட்ஷே புஸ்ட் (Haste pust) என்ற அரசியாரின் படையெடுப்பு குறித்த, எகிப்து மொழிக் கல்வெட்டுக்கள் எகிப்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுவிட்ட, புன்ட் (Purt) நாட்டின் அற்புதங்களில் ஒன்று, லவங்கப்பட்டை மரம் எனக் குறிப்பிடுகின்றன என்பது குறிப்பிடப்படலாம். (Scoffs Periplus Page : 82). ஆனால் லவங்கப்பட்டை குறித்த வாணிகத்தின் ஏகபோக உரிமையைத், தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்வதற்காக, அதன் இந்தியப் பிறப்பை, மேற்கத்திய மக்களிடையே மறைத்துவிட்ட அராபிய வணிகர்களால், லவங்கம், இந்தியத் துறைமுகங்