பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

179

ஒதலைத் தொடர்ந்தே நடைபெறும். ஆனால் ஆகம வழி. பாட்டு நெறியில் வேத மந்திரங்களுக்குச் சட்டபூர்வமான இடம் எதுவும் இல்லை. ஒருசில இங்கும் அங்கும் ஒதப்படுகின்றன. ஆனால் அதுவும் பெரிதும் முறையற்ற நிலையிலேயே ஒதப்படும். உதாரணத்திற்கு “து” என்ற அசைச் சொலோடு தொடங்கும் ஒரு மந்திரம், கடவுளுக்கு மணப்பொருளை அர்ப்பணிக்கப் பயன்படுத்தப்படும். உ-ம். “தூப” உண்மையில் இம்மந்திரம், ஒரு வண்டியின் நுகத்தடியை எடுக்கப்படுவதைக் குறிப்பதாம். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியின் உயிர்ப் பகுதி, வணங்கப்படும் கடவுளைக் குறிக்கும் பல்வேறு பெயர்களை, நான் வணங்குகிறேன் எனப் பொருள்படும் “நமஹ” என்பதை இணைத்துத், திரும்பத் திரும்பக் கூறுவதே ஆகும். வைதீக வழிபாட்டு நெறியின் சாரம், படையல்களைத் தீயிடைச் சொரிவதே ஆம். ஆனால், ஆகம வழிபாட்டு நெறியின் சாரம், உபகாரம் ஒன்றே; அதாவது தாம் வழிபடும் கடவுள் திருமேனியை நீராட்டுவது, ஒப்பனை செய்வது, உணவு படைப்பது, உண்மையில், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அல்லது தங்கள் அரசன் ஆகியோர்க்குச் செய்யும் அத் துணை உபசரனைகளையும் செய்வதாம். ஆகவே, வைதீக வழிபாட்டு நெறியில், வழிபடும் கடவுளின், காணக்கூடிய வடிவுடைய பிரதிநிதித்துவம் அதாவது தெய்வத்திருமேனி எதுவும் தேவையில்லை, காணக் கூடிய தீ ஒன்றே எல்லாக் கடவுள்களின் பிரதிநிதி ஆகும். ஆகமவழிபாட்டு நெறியில், வழிபடப்படும் ஒரு கடவுள், யாதோ ஒருவகையில் கட்புலன் ஆகக்கூடிய சில சின்னங்களாக அமைய வேண்டும். அச் சின்னம், மூட நம்பிக்கை சார்ந்த, வாள் அல்லது தண்டு, பட்டுப்போன அல்லது உயிருள்ள மரம், கல், ஒடும் அருவி, லிங்கம், சாலகிராமம் அல்லது அனைத்திற்கும் மேலாக, ஒரு படம், அல்லது வழிபடுவோரின் கருத்திற்கு ஏற்ப, உலோகம், கல், செங்கல், சுண்ணாம்பு இவற்றால் ஆன சிலை ஆகியன மூலம் பிரதிட்டை செய்யப்படுதல் வேண்டும்.