பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிகாரம் : IX
"வடஇந்தியாவும் தென் இந்தியாவும்"
(கி.மு. 1000 முதல் கி. மு. 500 வரை)

ஆயஸ்தம்பரும் பெளத்தாயனரும் :

சூத்திரகாரர்களில் (உரையாசிரியர்களில்) பெரும்பாலும், கடைசி குத்திரகாரராகிய ஆபஸ்தம்பர், கோதாவன் ஆற்றின் மேலைப் பள்ளத் தாக்கில் வாழ்ந்து, கற்பித்து வந்தார். யஜுர் வேத தாக்ஷிசினாத்ய பிராமணர்களுக்கு வாழ்க்கை முறைகளை வகுத்து அளித்தார். திருவாளர் பூலர் அவர்களின் கூற்றுப்படி, அவர் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்க் கொண்டுபோகப்படுவாரல்லர்: (Sacred Text Books of the East II Page : xxxvii-xliii) அவரைக், குறைந்தது, மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கொண்டுபோய் நிறுத்த விரும்புகிறேன். காரணம் பாரதப்பெரும்போருக்கு ஐந்து தலைமுறைக்குப் பிற்பட்ட, அதாவது கி. மு. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஸ்வேதகேதுவை. "அவர்” அதாவது அண்மையில் வாழ்தவராக, அவர் பேசுகிறார்.[Pargiter: Ancient Indian Historical Tradition Page : 330]. மேலும் "ஆப்ஸ்தம்பர் பாணினியின் இலக்கண நெறியைப் பின்பற்றவில்லை". "அவர் அதை அறிந்திருப்பதும் நடைபெறாத ஒன்றாம்" என்றும் திருவாளர் பூலர் கூறுகிறார். (Sacre Text Book of the East. II Page : XLIII] பெரும்பாலும் அவர், பாணினிக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவராவர். கி. மு. நான்காம் நூற்றாண்டு வாழ்ந்தவர் பாணினி என்பதற்கு ஆதரவாகக் கூறப்படும் வாதங்கள் அனைத்தை பும், திருவாளர்கள் கோல்டுஸ்டக்கர் அவர்களும் பி. ஆர். பந்தர்கார் அவர்களும், தகர்த்துவிட்டு, அவருடைய காலம்,