பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தமிழர் வரலாறு

மாவட்டங்களில் உள்ள இடங்கள், ஆறுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டு ஆய்வு செய்திருப்பது நடைபெற்றுளது. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய அஷ்டாத்தியாயியை, அவருக்குத் தெரிந்திருந்த இந்திய நிலப்பரப்பில், முழுமையான நில இயல் நூலாக மதிப்பது சரியாகாது. தம்முடைய இலக்கண நூலில் குறிப்பிடாத நாடுகளின் பெயர்கள் அவருக்குத் தெரியாது என்று கூறு வதும், மேலும் ஒருபடி சென்று. அவர் காலத்து ஆரியர்கள், அப்பெயர்களை அறிந்திருக்கவில்லை என நிலநாட்டுவதும், இவ் வாதம் குறித்து ஏதும் பேசாமல் இருப்பது விடுத்து அதைப் பெரும் நகைப்பிற்குரிய ஒன்றாகத் தள்ளிவிடு வனவாம்.

"இந்தியாவின் தனிமிகச் சிறப்பியல்பு வாய்ந்த மரமாம். ஆல், ரிக் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, ரிக் வேதப்பாராயணப் பாடல்கள் பாடப்பெற்றபோது, ஆல் போலும் ஒருமரம் இந்தியாவில் இல்லை என ஒருவன் மிகவும்: ஆணித்தரமாக வாதிடவும் கூடும்' எனக் கூறுவதன் மூலம், இவ்வாதத்தை எள்ளி நகையாடியுள்ளார் திருவாளர் பர்கிதர்: அவர்கள்.(Pargiter's Ancient Indian Historical Tradition : Page : 25). "அது, ஆல் குறித்தும் உப்பு குறித்தும், இன்றைய ஆய்வாளர் முடிவுப்படி, ஆரியர்கள் சென்று. தங்கியிருந்த பாரியாத்திரா மலைக்குன்றுகள் (ஆரவல்லி மலைத் தொடர்) குறித்தும் ரிக்வேதம் ஊமையாகவே இருப்பதை ஒருவன் கருத்தில் கொண்டவழி, விந்தியமலை, மற்றும் பிற நில இயல் கூறுகள் குறித்து அவை ஏதும் கூறாதிருப்பது, அது. அவற்றை ரிக்வேதம் அறிந்திலது என்பதை உணர்த்துவதாகாது", என்று; மேலும் அவர் கூறியுள்ளார். (Pargister's Ancient Indian Historical Traditions : Page : 299) இருவரில், ஒருவர். பெரும்பாலும், பாணினியின் சம. காலத்தவரும், பிறிதொருவர், அவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் சிறப்புற வாழ்ந்தவரும் ஆகிய பெளதாயனரும், ஆயஸ்தம்பரும், தென்னிந்தியாவில் வாழ்ந்து, வாழ்க்கைச் சட்ட திட்டங்களை வரைந்தனர். அவர்கள், ஆரியர்கள்