பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அத்துணை எளிய செயலன்று என்பதால் அம்முயற்சியை மேற்கொள்ளச் சிறிது அஞ்சினேன். ஆயினும், இதுகாறும் அது செய்ய யாரும் முன் வராமையாலும், கால்டுவெல் அவர்களின் திராவிடமொழி ஒப்பிலக்கண நூலின் என் மொழிபெயர்ப்பு நூலை அறிந்த பலரும், இதையும் மொழிபெயர்க்குமாறு ஊக்குவித்தமையாலும், மொழிபெயர்ப்புப் பணியினை மேற்கொண்டேன். 1983இல் மேற்கொள்ளப்பட்டது 1987ல் முடிவுற்றது. ஆனால் 1989இல்தான் அச்சேற முடிந்தது: வெளியிட முன்வந்த, தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தவர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி:

திருமாவளவன் என்ற தலைப்பிட்ட என் முதல் நூலை, 1951இல் வெளியிட்ட கழகப் புரவலர் திரு. சுப்பையாப் பிள்ளை அவர்களின் மருகர், திரு. முத்துக்குமாரசுவாமி அவர்கள், இந்நூலை வெளியிட முன்வந்தது, சாலவும் பொருந்தும்.

கா. கோவிந்தன்