பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடஇந்தியாவும் ... கி. மு 1000 ... 500 வரை 225 களில், அது, "காவெரபட்டன்"மாக மாறி, வழக்கப்பட்டது என்பதும், ஆற்றுப் பெண்தெய்வத்தின் தந்தை பெண். "க்வெரரிஷி" என்றும், கட்டுக்கதை பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தது என்பதும் உய்த்துணரப்படும். ஈண்டும், "அகித்தி", அன்புசெலுத்துவோரால், அன்புத்தொல்லைக்கு, உள்ளாக்கப்பட்டார். அதனால், "அஹிதீப" என அழைக்க கப்படுவதும், பெரும்பாலும், “நாகதீபம்" போன்றதே. ஆனதும், "தம்பபண்ணி" (சமும்) என்ற தீவிற்கு அண்மையில் இருப்பதும், அதனால், தான், முன்னரே கூறியது போல், நாகர்களின் நாடாம் மலபார்க் கடற்கரையான "காரதீபம்" என்ற இடத்திற்குச் சென்றுவிட்டார். அங்கு, அகித்தி, அதாவது போதிசத்தர் நிறைபேரறிவு பெற்றுவிட்டார். அகித்தி , ஒருசிலரால், நிலபேறுடைய காரணம் ஏதும். இன்றி, அகஸ்தியராகக் கருதப்பட்டார். .

ஸூஹபாஹீ

ஜாதகா கதைகளில் காணப்படும், தென்னிந்தியா பற்றிய இவைபோலும் குறிப்புகள், கி. மு. முதல் ஆயிரத்தாம் ஆண்டின் மத்தியில், தென் இந்தியா, வட இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடவில்லை : இந்தியாவின் அவ்விரு பிரிவு களுக்கும் இடையில் அரசியல் அல்லாத பிற உறவுகள், எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவே இருந்து வந்தன. என்பதை உறுதி செய்கின்றன. புத்தர் இறந்த, பெளத்தர் சொல் நடையில் கூறு வதாயின், உலகப் பேரிறைவன் பரினிபான படுக்கையில் படுத்த விட்ட அன்று பரிணிபான பஞ்சம்ஹி நிபன்னெ லொகநாயகொ. மகாவம்சம் : 7 : 1) சிங்கப்படை கொண்ட "ஸீஹபாஹி"வின் மகன் விஜயன், தன்னைப் பின்பற்றுவோர் ஏழு நூறு பேருடன், "லாள" ("ராத" - கிழக்குவங்காளம்) நிாட்டி விருந்து அவனுடைய தீயொழுக்கத்திற்காக, அவனுடைய தந்தையால் நாடுகடத்தப்பட்டு, சிலோனில் அடியிட்டான். கலத்தில் ஏற்றிக் கடலில் விடப்பட்டான். அவன் கடற்பயணம் பற்றிய நிலவியல், வழக்கம்போல் நம்புதற்கு,