பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வரலாறு

(தொடக்ககாலம் முதல் கி. பி. 600 வரை)


முன்னுரை

வரலாற்றின் குறிக்கோள்

வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க்களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக்கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்துகொண்டேயிருக்கும் பழங் கதை, அரச குல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப்பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவை தாம் வரலாறு என்றால், கி. பி. 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஒர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம். இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறுபட்ட பண்பாடு, நாகரிகங்களை வளர்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குகளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின், சமூக, சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, காதல், பாடல், ஆடல், அரசர்க்கும் கடவுளர்க்கும்