பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தமிழர் வரலாறு

கவிந்து அவிர் அசைநடைப் பேதை
மெலிந்திலள்: நாம் விடற்கு அமைந்த தூதே
- குறுந்தொகை : 182

காதலனை ஏற்றுக்கொள்ளப் பிடிவாதமாக மறுத்திருக்கும் ஒரிளம் பெண்ணின் தோழி, அவளுக்குப் பின் வருமாறு கூறுகிறாள் : உணவு உண்ணமாட்டா ஒரு குதிரையைப் பனைமடல்களால் பண்ணி, அதற்குச் சிறிய மணிகளைக் கட்டி, முதுகில் இட்ட கலன் நழுவாதவாறு பின்னே கட்டும் வார்க்கசிகையும் கட்டி, சிறுசிறு அரும்புகளைக் கொண்ட எருக்கமலர் மாலை அணிந்த ஒரிளைஞன் அதில் வீற்றிருக்க: நம் ஊர்க்குறும்பு மிக்க இளஞ்சிறுவர்கள், நம்மூர்த் தெருவில், எம்பின்னே, தொடர்ந்து ஈர்த்து வரலாயினர் ; என்னே அவர் செயல் !

"சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குறுமுகிழ் எருக்கம் கண்ணி சூடி,
உண்ணா நல்மா பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள்.”
-நற்றிணை : 228


பெருந்திணை என வழங்கப்படும் இத்தகைய பாடல்கள், இறை வழிபாட்டுப் பாடல்கள் பாடத் தொடங்கிவிட்ட கி. பி. 600க்குப் பிறகு, காதலன் கடவுளாக, அவன் மீது கொண்ட காதல் கைகூடாததாகப் பாடப்படும் “மடல்” எனும் ஒருவகைப் பாடலுக்கு வழிசெய்துவிட்டன. ஆகவே, அவை மிகவும் சுவையுடையவாயின.

மக்களின் அன்றாட வாழ்க்கை :

மக்களின் காதல் வாழ்க்கை மட்டுமல்லாமல் அக்காலத்திய, அவர்களின் அன்றாட வாழ்க்கை நிலைகளும் அப்பாடல்களில் வரைந்து காட்டப்பட்டிருக்கும். ஆனால், அப்பாடல்களெல்லாம் அழிந்துவிட்டனவாதலின், மக்கள் நடத்திய அன்றாட வாழ்க்கை நிலை பற்றிய ஒரு படத்தை,