பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

279


அறம் வழங்கும் ஊர்ப்பெரியவர்கள் கூடும் ஆலமரத்திலும், ஊர் முதியோர் ஓய்வு கொள்ளும் பழைய குடில்களிலும் நடப்பட்ட கந்து எனும் மரக்கழிகளிலும் இடம்பெற்றிருந்த கடவுள் எது என்னும் வினா, விடைகாண மாட்டாதே நிற்கிறது. இவ் வினாவிற்கு விடை காண்பதற்கு முன்னர், நாம் ஆய்ந்துகொண்டிருக்கும் இக்காலத்திற்கு மிக மிக முற்பட்ட காலமாகிய கற்கால கட்டத்தில், ஐயத்திற்கு இடம் இன்றி வழிபடுவதற்காக என்றே கல் லிங்கங்கள் செய்யப் பட்டன என்பது குறிப்பிடல் பொருந்தும். உலோகக் காலம் (வட இந்தியாவில் செப்புக் காலம், தென் இத்தியாவில் இரும்புக்காலம்) தொடங்கிய பின்னரும் கல்லிங்க வடிவங்கள் தொடர்ந்து வழிபட்டுவரலாயின. லிங்கம் போல் தோற்றம் அளிக்கும் சில பொருட்கள், ஹாரப்பா, மோகன்ஜோதரோக்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று. உயரத்தில் அரை அங்குலத்திலிருந்து ஓர் அடிவரை வேறுபடும் சதுரங்க விளையாட்டுக்காய்கள் போலும் வடிவுடையன இரண்டு, குறுக்கே அரை அங்குலத்திலிந்து 3 அடி அல்லது 4 அடி உயரம் உள்ள வட்டக்கல் வடிவுடையன. அவற்றுள் சில காணப்பட்ட சூழ்நிலையோடு, அது தொடர்பான பொருள்களின் தொகுதியினையும் இணைத்துப் பார்க்கும் போது, அவ்வுண்மைகள் வழிபாட்டு முறைக்கு உரிய, யாதோ சில பொருள்கள் அங்கு இருந்தன என்ற முடிவிற்குச் சிறு சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. அவ்வட்டக்கல், மெஸபடோமியாவில் காணக்கிடைத்த ஒரு பொருளோடு ஒருமைப்பாடுடையதான் செண்டு அல்லது தண்டாயுதத்தின் தலையாக இருக்காலம் என்ற கருத்தும் கூறப்பட்டது. ஆனால், நூலாசிரியரின் கருத்துப்படி, பலபடியாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம், வட்டக்கல், யோனி ஆகும். சதுரங்கக்காய் போலும் பொருள் லிங்கம் ஆகும் என்பதே ஆம். யோனியும் லிங்கமும், வடகோடி முதல் தென்கோடி_வரை, கீழ்க்கோடி முதல் மேற்கோடி வரையான இந்தியா முழுவதும், சிவனைக் குறிக்க,எல்லோர்க்கும் விளங்கும். வடிவமாகும் லிங்கவழிபாடு,