தமிழர் பண்டை நாகரீகத்தின் நிலஇயல் அடிப்படை 19 துணைபுரிந்தமையால் வீடுகள் அருகியே தேவைப்பட்டன. தங்குவதற்கான் இடத்திற்காக அல்லாமல், உணவுப் பொருட்கள் வடிவிலான பழங்காலச்செல்வத்தை ஈட்டி வைப்பதற்காகவே வீடுகள் முதன்முதலாகக் கட்டப்பட்டன. உணவுப் பொருட்கள் சேமித்துவைக்கும் தேவையைப் பழங்கால மனிதன் இன்னமும் உணரவில்லை. ஓரிடத்தில் நிலைத்து இராமல் இடம் பெயர்ந்துகொண்டே இருக்கும் நாடோடி வாழ்க்கை முறையின் தேவை, நிலையான குடியிருப்பு இல்லாக்குறைபாடு ஆகிய இவை ஆண்மகன் வாழ்வில், குடும்ப வாழ்வு பற்றிய இயல்பான உணர்ச்சியைத் துாண்டுவதாக இல்லை. ஆகவேதான் குடும்பத்தில் பெண்ணே தலைவியாம் வாழ்க்கைமுறை, பழங்குடிமக்களிடையே முதலில் இடம் பெற்று வளர்ந்தது. இவ்வகை வாழ்க்கைமுறை அமைப்பிற்கு, மற்றுமொரு சூழ்நிலையும் ஊக்கம் அளித்தது. ஆதிமனிதன் விரிவான மணச்சடங்குகளால் சிக்க வைக்கப்படவில்லை. கண்டதும் காதல், உடனடியாக ஏற்றுக்கோடல், இவற்றைத் தொடர்ந்து பையப்பைய இடம்பெற்றுவிட்ட பண்டைமுறையிலாம் விருந்தே திருமணச் சடங்காக உருப்பெற்றது. திருமண உறவு நிலையான ஒழுக்கமாக எல்லாக்காலத்தும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். கூறிய இக்காரணமும், தனக்கெனச் சொத்துரிமை கொள்ளும்முறை வளர்ச்சி பெறாத நிலையும், நிலையான குடியிருப்பு முறையில் பற்று இன்மையும், பெண்ணே குடும்பத்தலைவியாம் முறை, மிக நீண்டகாலம் நிலைத்திருந்தமைக்கு ஊக்கம் ஊட்டுவவாயின. :: * தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் ஆசை எப்போதும் மனிதனுக்குச் சிறப்பளிப்பதாம். அதிலும் குறிப்பாக மகளிரின் பெருவழக்கமாம். குறவர் மகளிர், இன்றுபோலவே, அன்றும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி எடுத்து, தங்கள் மாந்தர்களை ஒப்பனை செய்ய, அணிந்துகொள்ளும் மாலையாக அவற்றைக் கோப்பதிலேயே தங்கள் ஒய்வுநேரங்களைக் கழித்தனர். அவர்களின் காதலர் வேட்டையில் தாம்