பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் வாழ்க்கை கி. பி.....ஆண்டுகள் 423

பெண்மான், மருண்டு மருண்டு விழிக்கும் அழகிய கண்களை உடையவாய தன் குட்டிகளோடு களர் நிலம் நோக்கி ஓடி விடவே, அவற்றின்பால் கொண்ட ஆராக்காதல் நெஞ்சோடு, அவற்றைத் தேடி அலையும் ஆண்மான் அதோ விரைகிறது : காண்பாயாக". "இலையில் பிடவம் ஈர்மவர் அரும்பப், புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப் பொன்எனக் கொன்றை மலர, மனணிஎனப் பன்மலர்க் காயா குறுஞ்சினை கஞலக், கார்தொடங் கின்றே காலை ................. கழிப்பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனன் இரிந்து ஓடக் காமர் நெஞ்சமொடு அகலாத் தேடூஉ நின்ற இரலை ஏறே'

  - நற்றிணை : 242: 1-5 ;6 - 10

கேட்க இனிப்பன, முல்லைக்காட்டு ஒலிகள், "தேனடைகள் கட்டப்பெற்றிருக்கும் நெடிய முடிகளை யுடைய மலைச்சாரலில், குவிந்த இலைகளை நெருங்கக் கொண்ட முசுண்டையில், வானத்தில் விளங்கும் மீன் கூட்டம் போலக் காட்சி தருமாறு, வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் நள்ளிரவின் நடுயாமத்தில், ஆட்டுக்குட்டிகளை, மழை மறைக்கும் ஒலைப் பாயை முதுகில் கொண்டவாறே, ஒரு சேரக் கொண்டு காத்துக்கிடக்கும் இடையன், இனிய மணம் கமழும் முல்லை மலர்களைத் தோன்றிப் பூக்களோடு, வண்டுகள் வந்து மொய்க்குமாறு தொடுத்த மாலையை, அதினின்றும் நீர்த் துளிகள் ஒழுக, தலையில் அணிந்து கொண்டு, குளிர் போக்க எழுப்பிய சிறுதீயில்தேன் உள்ளங்கைகளைக் காய வைத்துக்கொண்டே, ஆட்டு மறிகளை விரட்டுவான் வேண்டி எழுப்பும் நீண்டஒலி, தினைப்புனத்தை