பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி.பி....ஆண்டுகள்

435

பேய்கள், மரங்களிலும், இடுகாடுகளிலும் வாழும் என்று தம்பினார்கள். பேய், தன் கூட்டத்தோடு ஆடிக்களிக்கும் இடுகாட்டை ஒரு புலவர் குறிப்பிட்டுள்ளார். (புறம் : 288 : 4 - 5) போர்க்களத்தில் வீரப் புண் பெற்று இறந்து வீழ்ந்து இடக்கும் வீரர்களின் வீரப் புண்களைத் தோண்டி, அதிலிருந்து பெருகிய செங்குருதியால் சிவந்து போன தன் கைகளால் தனது தலைமயிரைக் கோதி முடித்து, அதனால் கறுத்த தன் மேனியும் செந்நிறங் காட்டும் ஒரு பேய்மகளைக் காட்டுகிறார் ஒரு புலவர்.

‘’பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்‘’

- புறம் : 62 : 2-4

பேய்மகள் பிணத்தைத் தழுவி, அதன் வெள்ளிய பிண்த்தைத் தின்னும் ; ‘’போஎய் மகளிர் பிணம் தழூஉப்பற்றி, விளர் ஊன் தின்ற வெம்புலால்‘’ (புறம் : 359 : 4.5) பேய், மகளிரைப் பற்றிக் கொள்ளும்; அவ்வாறு பேயால் பற்றப்பட்ட மகளிர், குறித்து ஆடுவர். ‘’முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும்‘’. (புறம் : 259 : 5.6) வெண் கடுகைப் புகைத்தால் பேய் ஓடி மறைந்துவிடும். ‘’ஐயவி புகைப்பவும்‘’ (புறம் 98 : 1.5) என்றெல்லாம் மக்கள் நம்பி இருந்தனர்.

ஒடுகின்ற ஆற்றின் இடையே உள்ள, துருத்தி என்றும் அழைக்கப்படும் மேட்டில், பல்வேறு இசைக்கருவிகள் இசை எழுப்ப. ஆட்டின் கருத்தை அறுத்துத் தினையைப் பிரப்பங் கூடையில் பரப்பி வைத்து தாம் வெளிப்படவந்து உலாவல் அல்லது, நோய்களைத் தீர்க்கலாகாத் தெய்வங்கள் ஒருசேர வழிபட்டு இவள் பேயால் பற்றப்பட்டாள் என்ற முடிவிற்கு வந்து நிற்கும் மகளிரைக் காட்டுகிறார் ஒரு புலவர்.