பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

437

என்னுடைய நூலிலும், விளக்கப்பட்டுள்ளன. ஆங்கே 'எடுத்துக் காட்டிய கடவுள்களே அல்லாமல், வேறு கடவுள் களையும் தமிழர் வழிபட்டனர். திங்கள், அவற்றின் ஒன்று. கடல் நடுவே, மீன் பிடிபடகுகளாம் திமில்களில் ஏற்றப்பட்டுக் காட்சி அளிக்கும் விளக்குகள் போல , செம்மீன்கள் ஒளிவிடும் விசும்பின் உச்சிக்கண், முழுமதி நாளன்று, அம் முழுமதியைக் கண்டு, காட்டுவாழ் மயில் போன்ற, சில வளையல்கள் அணிந்தவளாய என் விறலியும் நானும், அம் முழுமதி, வளவன் வெண்கொற்றக் குடை போன்றுளது என எண்ணியவாறே தொழுதோம் அல்லவோ?' என்ற புலவர் வினாவில், மதி வழிபாடு குறிப்பிடப்பட்டுளது.

‘’முந்நீர் நாப்பண் தியில் சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி ண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ ? ..................
வளவன்...........................................
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே",

-புறம் : 60

('மாக விசும்பு' எனும் இத்தொடர், புறம் : 35, 60, 270, 400, அகம் : 258, மதுரைக்காஞ்ல் : 464 : பரிபாடல் 47 ஆகிய பல இடங்களில் வந்திருத்தாலும், உரையாசிரியர்கள் அதற்கான தெளிவான பொருளை உணர்த்தினாரல்லர்).

காக்கைக்கு உணவு அளித்தல், ஒவ்வொரு வீட்டிலும், நாள்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு சமயச் சடங்கு: ‘’கதிர்கள் எறித்தலால், நடப்பார் கால்களை வெப்பம் பண்ணு மாறு ஞாயிறு காயும் பகற்பொழுதில், நகரில் உள்ள பெரிய மாளிகைகளுக்கு வரும் விருத்தினர்களை வரவேற்று உணவளித்து ஒம்புவான் வேண்டி, பொற்றொடி அணிந்த