பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

443

 தேர்ப்படையினையும் உடைய சேரனுக்கு உரிய, செல்வத்தால் சிறந்த மிகப்பெரிய நகரமாகிய கருவூரின் துறையில், தெளிந்த நீர் ஒடும் குளிர்ந்த ஆன்பொருநை ஆறு. உயர்ந்த கரையில் குவித்துள்ள மணலின் எண்ணிக்கையிலும். பலவாக, நாம் தழுவி இன்புறுவோம் : நெஞ்சே! வருவாயாக!

கேள்கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு, புகல்சிறந்து,
ஆரம் கண்ணி, அடுபோர்ச் சோழர்,
அறம்கெழு நல்லவை உறந்தை அன்ன,
பெறலரும் நன்கலன் எய்தி, நாடும்
செயலரும் செய்வினை முற்றினம், ஆயின்;
அரண்பல படர்ந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாளங் காடி நாறும் நிறுநுதல்,
நீள்இரும் கூந்தல், மா.அ யோளொடு,
வரை குயின் றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரைமுகந் தன்ன மென் பூஞ் சேக்கை,
நிவந்த பள்ளி, நெடும் சுடர் விளக்கத்து
நிலம்கேழ் ஆகம், பூண்வடுப் பொறிப்ப,
முயங்குவம்; சென்மோ; நெஞ்சே; வரிநுதல்
வயம் திகழ்பு இமிழ் தரும் வாய்புகு கடாத்து
மீளி மொய்ம் பொடு நிலன் எறியாக் குறுகி
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
கடும்பகட்டு யானை, நெடுந்தேர்க் கோதை
திருமா வியன் நகர்க் கருவூர் முன்துறைத்
தெண்ணீர் உயர்கரைக் கவை இய
தண்ஆன் பொருநை மணலினும் பலவே.

-அகம்: 92