பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444

தமிழர் வரலாறு

அரசர்கள் வாழ்ந்ததால் நகரங்கள், முக்கியத்துவம் பெற்றுவிட்டன. நகரங்கள் பெருகவே, செல்வமும் அரசர்களின் முக்கியத்துவமும் உயர்ந்துவிட்டன. தமிழகத்து மூவேந்தர்களும், பண்டைக் காலத்தில், வேலையற்றுக் கிடக்கும் நாட்களில் பொழுது போக்கிற்காகவும், தங்கள் ஆண்மையை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும், போரிட்டது போலல்லாமல், இப்போது, தங்கள் ஆட்சி எல்லையை விரிவாக்கிக்கொள்வதற்காகவும் , ஏனைய அரசுகளை அடிமை கொண்ட பேரரசாக உயர்வதற்காகவும் ஒருவரோடொருவர் போர் தொடுத்துவந்தனர். ஆகவே, இக்காலப் பாடல்களில், அரசர்களின் கொடைவளப்பாராட்டு இன்னமும் இடம் பெற்றுளது என்றாலும், அவை, அரசர்களின், போர்க்கள வெற்றிகளைப் பாராட்டலாயின.

பகைவரை வென்று, அவர்தம் பட்டத்து யானையின் பொன்னாலான நெற்றிப் பட்டத்தைக் கைக்கொண்டு, அது அழித்துப் பண்ணிய பொற்றாமரை மலரைப், பாடிப் புகழும் பாணன் தலையில் அழகு பெறச் சூட்டிய சிறந்த தலைமையினையும், போரில் புறம் காட்டாக் கோட்பாட்டினையும் உடைய பெரியோன் வழியில் வந்தவனே ! இராப்பொழுது இங்கேயே உறங்கிவிட்டதோ என ஐயுறுதற்கு ஏற்பப் பேரிருள் சூழ்ந்த அடர்ந்த சிறுகாட்டையும், பறை ஒலி போல் ஒலிக்கும் மலையருவிகளையும் உடைய முள்ளூர் மலைக்கு உரிய வேந்தே! முள் போலும் கூரிய பற்களையுடைய பாம்பையும் நடுங்கப்பண்ணும் இடியேறுபோல் போர் முரசு முழங்க, தலைமை தாங்கி வந்த யானையும், அதன் மீது அமர்ந்து போரிட்ட அரசும் களத்தில் ஒருங்கே இறந்துபட, அழித்தற்கரிய அவர் நாற்படைகளைச் சிதற அழித்து, சிறிதும் பொருந்தாத பகை, தன் நாட்டை அணுகவும் விடாது, தடுத்து நிறுத்தும் எல்லையாகத் திகழும் பெண்ணையாறு பாயும் நாட்டிற்கு உரியவனே : உன் புகழைப் பாடவல்லமாயினும், வல்லேமல்லேமாயினும், உன்பால் வந்து உன் புகழ் பாடுவேமாயின், அழிக்கலாகாத் தன்மையராகிய உன் கிளையொடு நீயும் பெரு வாழ்வு வாழ, இந்நிலமிசை உள்ளார்