பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழர் வரலாறு

முகிழ்த்தற்கு, எந்தத் தனியுடைமை தத்துவமுறை துணை செய்ததோ, அத்தத்துவமுறை, கால்நடைச் செல்வப்பெருக் கால் உருப்பெறலாயிற்று,

முதல் காட்சியிலேயே காதலர் ஒன்றுபடுதல், திருமணச் சடங்குகளால் கட்டுப்படுத் தப்படாமை, புலிப்பல் தாலியை யையும், இடையில் அணிந்துகொள்ளத் தைத்த தழை ஆடையையும் அளிப்பது ஒன்றினாலேயே, திருமணம் முறைப்படுத்தப்படுதலாய், இயற்கை வழித் திருமணம் என அழைக்கப்பட்ட பழங்கால மணமுறை, பழந்தமிழ் இலக்கியங்களில் களவு என அழைக்கப்பட்டது. அது மேய்ச்சல் நிலப்பகுதியாம் முல்லையில், காதலர் ஒன்றுபடுவதற்கு முன்னர், திருமணச்சடங்குகள் இடம்பெற வேண்டுவதான கற்பு எனும் வடிவில் மெல்ல மெல்ல மாற்றி அமைக்கப்பட்டது. காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவது, நிகழ்வதற்கு முன்னர், மலர் களாலும், இலைகளாலும் அழகு செய்யப்பட்டதும் ஆயர் களின் இயல்பான குடியிருப்பாவதுமாகிய பந்தலின்கீழ், அப்பழங்குடி ஆயர் மகளிர் ஆகிய அனைவர்க்கும் விருந்தளிக்கும் நிகழ்ச்சியே திருமணச் சடங்கு முறையில் சிறப்பான பகுதியாம். குடும்பத்தந்தை, கணக்கின்றிப் பெருகும் கால்நடைகளை உடையவராகி, அக்கால்நடைச் செல்வம் வழங்கும் பெருஞ்செல்வாக்கினைப் பெற்றுவிடுவதால், கற்பு என்ற அத்திருமணமுறையும், தனியுடைமைமுறை வளர்ச்சியும், குடும்பத் தலைமை ஆடவர்க்காம் சமுதாய மறுமலர்ச்சி முறைக்கு வழிவகுத்துவிட்டன. சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்நிலங்கள், கால்நடை மந்தை ஒன்றைப் பேணு வதற்குப் போதுமானதாக ஆகாதுபோமளவு சிறுத்துவிடும் ஆதலாலும், பழங்குடியினர் பல்வேறு உட்பிரிவினராகப் பிரிவுண்டதனாலான குடும்பம், அக்குடும்பத்தவர் அனை வரும் ஒன்றுபட்டு ஒரே குழுவாக ஆக்கப்பட்டால்தான், போட்டிகளைக்கடந்து நிலைபெற்று நிற்கும் ஆதலாலும், கூட்டுக்குடும்ப முறை தோன்றலாயிற்று. பெரிய குடும்பத்தின் தலைவனாக இருந்தவன், அரசனாக நிலைஉயர்வு பெற்றான். தமிழ்மொழியில் அரசனைக்குறிக்க வழங்கும்