பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

445


எல்லாரினும் அறிவு ஒழுக்கங்களில் மாசற்ற அந்தணனாகிய கபிலன், பொருள் வேடி இரந்து செல்லும் புலவர்களுக்கு இனிப் புகழ்வதற்கு இடமில்லை எனக் கூறுமளவு உன் புகழும், அவன் புகழும் பெருகி நிற்கப் பாடிவிட்டான். அதனால், சினம் மிக்க சேனைக்கு உரியவனாகிய சேரனுக்குரிய மேலைக் கடலில், பிற நாட்டுப் பொற்காசுகளைச் சுமந்துவரும் கடலோடவல்ல பெரிய நாவாய்கள் ஓடிய இடத்தில், வேறு சின்னஞ் சிறு மரக்கலங்கள் ஒடமாட்டாதது போலும் நிலையினராகிவிட்டோமாயினும், எம்முடைய வறுமை துரத்த, உன்பெரும் புகழ் ஈர்த்துக் கொண்டுவர வந்து, உன் வளமைக் குணங்களில், சிலவற்றை நாங்களும் பாடிப் பாராட்டினம்,

ஒன்னார் யானை ஒடைப்பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய, விழுச் சீர்,
ஓடாப் பூட்கை உரவோன் மருக !
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே,
நின்வயின் கிளக்குவ மாயின், கங்குல்
துயில் மடிந் தன்ன தாங்குஇருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளுர்ப் பொருந !
தெறலரும் மரபின்நின் கிளையொடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலன் அழுக் கற்ற அந்த ணாளன்,
இரந்துசெல் மாக்கட்கு இனி இடனின்றிப்,
பரந்திசை நிற்கப் பாடினன் அதற்கொண்டு,
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது ; அனையேம் ; அத்தை
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையில் தொடுத் தன்ம் யாமே, முள் எயிற்று
அரவுஎறி உரு மின் முரசுஎழுந்து இயம்ப,