பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நிலஇயல் அடிப்படை

27

மருதநிலத்தில் எளிதில் கிடைக்காத பொருட்களுக்காக பரதவரிடமிருந்து உப்பு மீன் போன்றவற்றிற்கும் இடையரிடமிருந்து, பால், பால்படுபொருள் சிறப்பாக நெய் போன்றவற்றிற்கும், குரவரிடமிருந்தும், கற்கள், கற்களாலான தொழிற் கருவிகள் (இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரும்பு, இரும்பாலான தொழிற் கருவிகள்) போன்றவற்றிற்கும் விலையாகக்கொடுக்கும் பண்டமாற்று வாணிகம், பொருட்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நிலவழியாகக் கொண்டுசெல்லும் வண்டிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. நாகரீக வளர்ச்சிச் சக்கரம் முழுமை பெற்று விட்டது. புதுக் கற்கால நாகரீகக் காலத்திற்குப் பின்னர் உணவுகளும், புதிய மரம், செடி கொடி எதுவும் வழக்கத்தில் கொண்டுவரப்படவில்லை. மேனியை மறைத்துக்கொள்ளும் ஆடையை உருவாக்க, புதிய தொழில்முறை எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே மருத நிலத்தைச் சார்ந்த புதுக் கற்கால நாகரீகத்தின் முற்ற வளர்ந்த நிலையும் அந்நிலத்துக் கலையும், தொழில்களும், நாகரீகத்தின் கடைசி உண்மையில் மிகப்பெரிய படிக்கட்டைக் காட்டுவ ஆயின. பழங்காலத்தில் இரும்பு முதல், நம் காலத்தில் அலுமினியம் வரையிலான கனிவளக் கண்டுபிடிப்பும், நீராவி, எண்ணெய் ஆவி ஆகியவற்றால் இயங்கும் இயந்திரங்களும், மின்சாரத்தால் இயங்கும் விசைப்பொறிகளும் பழைய முறையிலான உழவுத் தொழில் உற்பத்திகளை விரைவும் எளிமையும்படுத்திப் போக்குவரத்தை விரைவுபடுத்த உதவி புரிந்தனவே அல்லது, புதிய உணவுப்பொருள் எதையும் உற்பத்தி செய்யவோ, வெய்யில், மழை, பருவந்தோறும் மாறும் வெப்ப தட்ப நிலைகளிலிருந்து உடலை மூடி மறைக்கும், புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவோ இல்லை.


இந்த வளர்ச்சி முதன் முதலில் எங்கே இடம் பெற்றது ?

மனித வாழக்கைக்குத் தகுதியுடைய நிலப்பகுதியின் இந்த ஐந்து உட்பிரிவுகளும் நிலப்பரப்பில் சிறுசிறு அளவில் ஒன்றையொன்று தொடர்ந்தாற்போல், இந்தியாவில், விந்திய மலைக்குத்தெற்கில் இடம் பெற்றுள்ளன. அதனால்