பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

497


களுக்கு அப்பாலுக்கு அப்பாலும் இடம்பெற்று, அந்நாட்டின் மையப்பகுதியிலிருந்து நெடு:தொலைவில் அமைந்துளது: பண்டை நாட்களில் பதினொரு தமிழ் மாவட்டங்களும் தனித்தனிப் பெயர்களைப் பெற்றிருந்ததுபோல், காஞ்சி மாவட்டம், தனக்கென ஒரு தனிப் பெயரைப் பெற்றிருக்க வில்லை : மாறாக, இன்று, தென்னார்க்காடு மாவட்டம் என அழைக்கப்படும் ‘’அருவா‘’ நாட்டிற்கு வடக்கே உள்ள நாடு எனும் பொருளில், ‘’ அருவா வடதலை‘’ என்று மட்டுமே அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், அதாவது, பல்லவ அரச இனம், ஆங்கு, இறுதியாகத், தங்களை நிலைபெறச் செய்து கொண்டு, அம்மாவட்டம், தமிழ் நாகரிகத்தின் நடுநாயகமாகி விட்டதற்கு நெடுங்காலத்திற்குப் பின்னரே, அது, ‘’தொண்டி‘’ என்ற கொடியால் பெயர் பெற்ற அரசர்கள், அல்லது இனத்தவர்களால் ஆளப்பட்ட மாவட்டம் எனும் பொருளில் தொண்டைமண்டலம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டது, அதன் பின்னர், தென்னார்க்காடு மாவட்டம்‘’ நடுநாடு‘’ ஆகிவிட்டது. ஆக, பண்டை நாட்களில், காஞ்சீபுர மாவட்டம், உண்மையான தமிழ் நாட்டிற்கு வெளியில், அருவா என்ற தமிழ் மாவட்டத்தின் வடக்கில் இருந்ததாகவே தமிழர்களால் கருதப்பட்டது என்பதை, நாம் அறிகிறோம்.

ஆந்திரர் :

இந்நிலப் பகுதிக்கு அப்பால் அமைந்திருந்தது, ஆரிய நாகரீகம், விந்தியத்தை ஊடுருவித் தஷிணபாதத்தில் பரவிய போது, அதை முதன்முதலில் ஏற்றுக்கொண்டவர்களாகிய, விந்தியத்திற்கு அப்பாலான தஸ்யூக்களாம் ஆந்திரர் ஆட்சி புரிந்து வந்த மேட்டு நிலம்: ஆந்திரரிடையே, பெளதாயனர், ஆபஸ்தம்பர் என்ற இரண்டு பிற்கால முனிவர்கள் தோன்றினர். ஆகவே, அவ்வாந்திரர், கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டின் தொடக்கத்தில், ஆரிய மயமாக்கப்பட்டனர். விந்தியத்திற்குத் தெற்கில், மிகப்பரந்த, ஆரிய மயமாக்கப்பட்ட ஒரு பேரரசை, ஆந்திரர்கள், நனி மிகப் பழங்காலத்தில்  Invalid template invocation→நிறுவியிருக்கநிறுவி

த.வ.-83