பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்

33

வடக்கிற்கும்-தெற்கிற்கும் இடையே, அந்நனி மிகப் பழங்காலத்தில் நிலவியிருந்த, இயற்கை விளைவித்த, பிரிவினை குறித்த ஆய்வு மேற்கொள்ளுவது, பயன் அளிக்கக்கூடியதே” என்றெல்லாம், மேலும் மேலும் கூறிச் செல்கிறார். “இந்தோ-ஆரிய முன்னோடிகள், தென்னாட்டுக்கு ஊடுருவிச் சென்றது அமைதியான முறையில் ஆகும். அவர்கள் தொடர்பு கொண்ட முக்கியவழி, எக்காலத்தும், கிழக்குக் கடற்கரை வழியே” என்று மேலும் கூறுகிறார். போக்குவரத்து வழித்தடம் பற்றிய திருவாளர் சிமித் அவர்கள்கூறிய கருத்தின் பொருத்தம் குறித்து, திருவாளர். டி.ஆர். பந்தர்கார் அவர்கள் எதிர்வாதம் செய்துள்ளார். “பாவர்” என்ற பிராமண ஆசிரியரின் மாணவர்கள் மேற்கொண்ட பயண நெறிகளை விளக்கிக்கூறும் “சுத்தனி பாதம்” என்ற நூலிருந்து, ஒரு கதையை, அவர், சான்றாக எடுத்தாளுகிறார். “தக்கன பாதத்தில், அசகா அஸ்மகா நாட்டில், கோதாவரித் கரையில் உள்ள ஒரு சிற்றூரில், “பாவரீ”, குடியேறி வாழ்ந்திருந்தார். அவர், தம்முடைய பதினாறு மாணவர்களைப் புத்தபெருமானுக்குத் தங்கள் வழிபாட்டினைச் செலுத்தி வருமாறு பணித்து அனுப்பிவைத்தார். அவர்கள் வடக்கில், “முளகா” நாட்டைச் சேர்ந்து (நைசாம் அரசின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டதான இன்றைய “பைதான்”) படித்தானத்திற்கும், அடுத்து “மாகிஸ்மதீ”க்கும் (இது இந்தோர் நாட்டெல்லையில், நர்மதாக் கரையில் உள்ள “மாந்தாதம்” ஆக அடையாளம் காட்டப்படுகிறது) உச்சயினிக்கும். சாகேதத்திற்கும் அவற்றிற்கு அப்பாலும் பயணம் செய்தனர்.

இதிலிருந்து அம் மாணவர்கள், மாகிஸ் மதீபிலிருந்து விந்திய மலையின் அப்பால் பகுதிக்கு, விதர்ப்ப நாட்டில் மூலமாகவே சென்றிருக்கவேண்டும் எனப், பொருத்தமுறக் கொள்கிறார் திரு. பந்தர்கார் அவர்கள். ஆரியர்கள், தென்னிந்தியாவுக்குச் சென்றபோது மேற்கொண்ட வழித்தடம் அவ்வாரியர்கள், விந்தியத்தைக் கடந்து, தென்னிந்தியாவுள் புகுவதற்குப் புறப்பட்ட இடமாம், நர்மதா ஆற்றங்கரையில்

த. வ:- 3