பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழர் வரலாறு

,

வழக்கங்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கும் தொல்காப்பியத்திலிருந்து, பகைவரின் ஆனிரைகளைக் கவர்ந்துகொள்வது, போர்தொடக்கத் திற்கான மிகப்பழைய முறையாகும்; அது வெட்சி எனப்படும்: போர்ப் பாடல்களில், வெட்சி ஏன் ஒழுக்கத்திற்குரிய நிலமாக மலைநாட்டைக் கொண்டிருந்தது என அறிகிறோம்.

மலைக் குகைகளில் வைத்திருக்கும் கால்நடைச் செல்வத்தால், சிறந்த ஒரு பழங்குடியினராவர், பாணிகள் என்பவர், அவர்கள், ஆரியருள் ஒரு பிரிவினரின் பகைவராவர். அவ் விரு இனத்தவரும், ஒருவரோடொருவர், பழங்காலப் புகழ் வாய்ந்த முறையாம் ஆனிரை கவர்தல் மூலம் போர் மேற் கொண்டனர். அத்தகைய போர் ஒன்றில், ஐரோப்பியப் பேராசிரியர்கள் கருதுவதுபோலும், ஒரு நாட்டின் மீது படைகளை அணிவகுத்து எடுத்துச் செல்லும் போர் அல்லாத போர் ஒன்றில், தங்கள் துணைக்கு, அக்னி, சோமன் ஆகிய கடவுள்களை நம்பியிருக்கும் கடவுள் வழிபாட்டாளர்களாகிய அக்னி, சோமன் என்ற இனத்தவர், பணிகளிடமிருந்து கால் நடைகளைக் கவர்ந்துகொண்டனர். '"

இந்திரன் அல்லது அவனுக்காகப் பணியாற்றும் பிரகஸ் பதி, பாணிகளின் கால்நடைகளைக் கவர்ந்துகொண்டான். 24

இவ்வகையில், பாணிகள் என்பார் தஸ்யூக்களில், கால் நடைச் செல்வத்தால் சிறந்த ஒர் இனத்தவராவர்; அவர்கள் வணிகர்களே அல்லர் என்பது காணக்கிடக்கிறது. வேத காலத்தில் தென்னிந்திய வாணிகம், கடலைச் சார்ந்து வாழ்ந்து, மிகப் பழைய காலத்திலிருந்தே, பரதவர் என அழைக்கப்பட்டு வரும் வணிகர்கள் கையில் இருந்தது. 28

சேர நாட்டில் ஆரியர் :

மூன்று இனத்தவர் ஆணை மீறினர்-ப்ரஜா ஹதிஸ்ரொ அத்யாயம் கியூஹ்" என்ற ஒரு தொடர், ரிக் வேதத்தில் (7. 101; 14) வருகிறது. இத் தொடர்க்கு விளக்கம் அளிக்கும் நிலையில், 'தைத்திரீய ஆரண்யகம்'