பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 தமிழர் வரலாறு

ஆரியக் கருத்துக்கள் மட்டுமல்லாமல், சமஸ்கிருதக் சொற்களும், பழைய தொகைப் பாக்களில் காணப்படுவதிலும்,அதிகமாக இதில் இடம் பெற்றுள்ளன. சமஸ்கிருதத்திலிருந்து வேண்டுமென்றே கடன் வாங்கப்பட்ட சொற்களாவன்: சகடம்’ (50), நாடகம்’ (55), தெய்வம்’ (104)“பூதம் (285) எந்திரம்’ (260), தருப்பை’ (264)மற்றும் ‘அமுது’ (475) இப்பாட்டு, தன் காலச் செய்யுட் படைப்புகளைக் காட்டிலும், ஆரியக் கருத்துக்களைத் தங்கு தடையின்றி மேற்கொண்டிருக்கும் அதே நிலையில், ஆரிய இலக்கிய நெறி எதனாலும் ஆட்சி கொளப்பட்டு விடவில்லை,ஆற்றுப் படைச் செய்யுளுக்கு ஒரு முன்மாதிரியான செய்யுளாகி, பழந்தமிழ் இலக்கிய மரபுகளை, முழுமையாக மேற்கொண்டு உளது: தமிழகத்தில், ஆரிய நாகரிகத்தின் மையமாகத் திகழ்ந்த காஞ்சியில் பாடப்பட்டு, ஆரியச் செல் வாக்கிற்கான அடிச் சுவட்டினை அளவின்றிக் கொண்டுளது என்றாலும், அது, பழங்காலத்தைச் சேர்ந்த பிற தமிழ்ப் பாக்களைப் போலவே, ஐந்திணை நிலத்து வாழ்க்கை முறைகளையும், அக்காலைத் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களையும் விரித்துரைக்கிறது.

    பெரும்பாணாற்றுப்படைப் பாட்டுடைத் தலைவனான இளந்திரையன், எந்தப் போர்க்கள வெற்றியாலும் புகழ் பெற்றவனல்லன். அவன் வீரம், பெரும்பாணாற்றுப்படை போலும் பாக்களின் வழக்கமாதல் போல, மிகைப்படுத்தப் பட்ட வெறும் புகழ் உரைகளாகக் கூறப்பட்டுள்ளனவே யல்லாது. குறிப்பிட்ட போர்க்களத்தில் பெற்ற எந்த ஒரு வெற்றியோ, பிற நாடுகளைக் கைக்கொண்ட எந்த ஒரு  வெற்றியோ அவனுக்கு உரியதாகக் கூறப்படவில்லை. பகைவர் அரண் மதிலை அழித்து, அப்பகைவரின் மணி