பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 தமிழர் வரலாறு

              கடல் கண்டன்ன ஒண்படைத்தானையொடு 
              மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, 
              உருமுரற்றன்ன உட்குவரு முரசமொடு 
              செரு மேம்படு:உம் வென்றியர் எனாஆ 
              மண்கெழுதானை ஒண்பூண் வேந்தர் 
              வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே,
              எம்மால் வியக்கப்படுஉ மோரே,
              இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
              குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
              புன் புலவரசின் சொன்றியொடு பெறு 
              உம் சிறுார் மன்னர் ஆயினும் எம்வயின்
              பாடறிந்தொழுதும் பண்பினாரே;
              மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
              உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்: 
              நல்லறிவுடையோர் நல்குரவு 
              உள்ளுதும் பெரும்! யாம் உவந்து நனி பெரிதே’
                                                             - புறம் :

இவ்வாறு கடிந்துரைக்கப்பட்ட அரசன். கரிகாலனாவன் எனக் கருதுகிறார் திரு. கனகசபை அவர்கள். அத்தகைய கண்டனத்திற்கு உரியனல்வனாம வளவு புலவர்கள் பால் பெருங் கொடையாளனாவன் கரிகாலனாதலின், அது சரியன்று; அவ்வாறு கொள்வதற்குத் திரு கனகசபை அவர்கள் காட்டும் காரணம், இரு அரசர்களுமே ‘திருமாவளவன்’ என்ற சிறப்புப் பெயரைக் கொண்டிருப்பதே ஆகும். ஆனால், ‘மாவளவன்’என்பது இயற்பெயரன்று ஆதலின், சோழ அரசன் எவனும் காவளவன் என அழைக்கப்படல் கூடும்,

புறநானூறு 45 ஆம் எண் செய்யுளில் சோழா் குலத்து உடன் பிறந்தார்_இருவர் ஒருவரோடு ஒருவர் போாிட்டுக் கொண்டிருக்கும்போது மூத்தவன். கோவூர் கிழாரால்