பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

147


பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான். சோழ நாடுமுழுவதையும், தன் ஆட்சிக் கீழ்க்கொண்டுவருவதன் முன்னர்க், கீழ்ப் படிய மறுத்த சோழச் சிற்றரசர்களையெல்லாம், அவன் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. அத்தகு போர் ஒன்று பி ன் வ ரு மா று கூறப்பட்டுளது, "போர்த்தொழில்" மாட்சிமைப்பட்டு, விரைந்து பாயவல்ல குதிரைப் படையோடும், கார்முகில் போலும் நிறம் வாய்ந்த தோலால் ஆன பரிசை ஏந்திய படைவீரர்களோடும், பகைவர் போர் முனைகள் பாழ்பட்டுப் போகச்சென்று, அவர்தம் உண்ணுநீர்க் குளங்களில் போர்க்களிறுகளை நீராட்டி, அப்பகைவர் நாட்டில், மூட்டிய நெருப்பின் ஒளி, கதிர்காயும் ஞாயிற்றின் செந்நிறம் போல் தோன்றி நிற்க, இடம் இல்லை எனக் கூறுமளவு சென்று தங்கும் பெரிய படையினையும், பிறர் படைத்துணை வேண்டாதே பெறலாகும் வெற்றியினையும் பகைவர் குருதிக் கறைபடிந்து புலால் நாறும் வாளினையும், பூசிப் புலர்ந்த சந்தனச் சாந்தினையும் உடைய, பகைவர்க்கு அச்சம் தரும் தலைவ! வள்ளையும், ஆம்பலும், பகன்றையும், பழம் நிறைப் பாகலும் உடையதாகிக், கரும்புக் காடல்லது, பிறகாடறியாச், சிறந்த வயல்வளம் பாழுற்றுப் போகக், காவல் செறிந்த பகைவர் நாட்டை, ஒள்ளி தீயூட்டிப், பகைவர் அஞ்சத்தக்க கடும்போர், நின்கருத்திற்கேற்ப புரிந்தன, பெரும ! உன் போர்க்களிறுகள்".

"வினைமாட்சிய விரை புரவியொடு
மழை உருவின தோல் பரப்பி
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளைவயல் கவர்பூட்டி,
மனைமரம் விறகாகக்,
கடிதுறைநீர்க் களிறுபடிஇ,
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்,
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரில் தோன்றப்,
புலம் கெட இறுக்கும் வரம்பில் தானைத்,