பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

151


வைத்துவிட்டார் திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் (பக்கம் : 417)

கொளுவிற்கும், விளக்க உரைக்கும், அவர் விதித்த காலத்திற்கான அடிப்படைச் சான்று எதுவும் காட்டாத அவர், கொளு, வரலாற்றுச் சான்று ஆகாது, என்ற தம் முடிவிற்கு ஆதாரம் காட்ட, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றுார் கிழார் பாடும் பாட்டு, 76, 77 பாக்களையும், சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து தண்ணீர் தா என்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணாது பாடியதான சேரமான் கணைக்கால் இரும்பொறையின் புறம் 74 பாட்டையும், சிறுகுடிகிழான் பண்ணனைப் பாராட்டும் கிள்ளிவளவன் பாடிய புறம். 173 பாட்டையும், சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தந்தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, ஒற்று வந்தான் என்று கொல்லப்புக்குழிப் பாடியதாகக் கூறும், கோவுர்கிழாரின் புறம் 147 பாட்டையும், எடுத்துக்கொண்டு திறனாய்வு செய்துள்ளார். (பக்கம் 411-416)

திருவாளர் அய்யங்கார் அவர்கள் கூறுவது போல், புறநானூற்றுக் கொளுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கும் தகுதியுடையவல்ல எனத் தள்ளி விடத்தக்கன அல்ல: மாறாக, நற்றிணை, குறுந்தொகை, நெடுந்தொகை, புறநானூறு ஆகிய நான்கு தொகை நூல்களிலும் உள்ள 1600, பாக்களிலும் கிடைக்கும் வரலாற்று மூலங்கள் அனைத்தையும் நுண்ணிதின் ஆராய்ந்து கொண்ட உண்மை முடிவுகளின் தொகுப்பே ஆகும்.

கொளுக்கள் ஏற்கத் தக்கன அல்ல என்பதை உறுதி செய்ய திரு. அய்யங்கார் அவர்கள் எடுத்து விளக்கம் அளிக்கும் அந்நான்கு நிகழ்ச்சிகளுள், ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கினங்க, ஒன்றை மட்டும் ஆய்ந்து: