பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழர் வரலாறு


வல்வில் ஓரியின் வில்லாற்றல், கொடைவளங்களை அறிந்து, வன்பரணர், புறப்பாட்டு ஒன்றில் (152) "கொலைவன் யார் கொலோ ? .. ஓரி கொல்லோ ? அல்லன் கொலோ ?" என வியந்து வினா எழுப்பி வாய் பிளந்து நிற்பதும், பெயர் அறியாப் படை மறவன் ஒருவனின் பேராண்மை கண்டு வியக்கும் பெயர் அறியாப் புலவர் ஒருவர், "யார் கொலோ ? அளியன்!" எனப் பிறிதொரு புறப்பாட்டில் (257) வியப்பு அடிப்படையாக எழும் வினா எழுப்பி நிற்பதும் காண்க,

இம்மரபை யொட்டி, புலவர் இடைக்குன்றுார் கிழார், புறம் : 77 ல், "யார்கொல்" என வினா எழுப்பியுள்ளார். இம் மரபு உணராத காரணத்தால், புறம் : 76 ல் அவன் ஒருவன், அவன் பகைவர் எழுவர் என்பதையும், அவன் ஆற்றலும் பெருமையும் அறியாது வந்துவிட்ட அப்பகைவர்களின் அறியாமையினையும், அவன், வேப்பந்தாரோடு உழிஞை மாலையும் அணிந்து சென்று, அப்பகைவர் எழுவரையும், ஒரு தானாகி நின்று வென்றதையும் விளங்கக் கூறியிருப்பதையும், புறம் 77ல் போர்க்களம் நோக்கிப் போகும் அப்போதும், அவன் இளமை மாறா நிலையினினக் கண்ணுற்று "யார் கொல்" என வினா எழுப்பி நிற்பதையும் கண்டு. "புலவருக்குத் தெரிந்தவனான, 76 ஆம் புறப்பாட்டுத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், புலவருக்குத் தெரியாதவனான 77ஆம் புறப்பாடு நனி இளையோனும், வேறுவேறுபட்ட இருவர் அல்லர், இருவரும் ஒருவனே என்பது நம்பக் கூடாத ஒன்று",

It is possible to believe, that the hero-victor of Talaya-langanam, known to the poet, and the boy-hero, unknown to the poet, were one and the same "person" (Page : 413)

எனக் கூறி எள்ளி நகையாடியுள்ளார், திருவாளர் அய்யங்கார் அவர்கள். {{Nop}}