பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

191


செவிடுபடப் பாடி, அக்கடவுளின் சினத்தைத் தணிவிப்பர். இவையல்லாமல், ஒவ்வொரு தெருவும், அவற்றிற்கே உரிய ஆடல்களாலும். ஆரவாரம் மிக்க களியாட்டங்களாலும் நிறைவுற்றிருக்கும்.

ஆடலும் பாடலும் படிப்படியாக உரம் இழந்து அடங்கிப் போகும். நடுயாமம் வரையும், இரவு இவ்வாறு கழிந்தது. சிறுகடையாளர்கள், மூங்கிலிலான படல்களைக் கால் இறக்கித் தாழ்த்திக் கொண்டு உறங்கலாயினர் . இனிய தின்பொருள்களை விற்கும் எளிய வணிகர். அக்கடைகள் முன்னரே கிடந்து உறங்கலாயினர்; கூத்தாடுவாரும், வேறுபல இன்பக் களியாட்டம் காட்டுவாகும், அவ்வாறே ஒய்வு கொள்வாராயினர். அலையோசை அடங்கிய கடலே போல், மாநகரம், உறக்க மயக்கத்தால் போர்க்கப்பட்டுவிட்டது. மதுரை மாநகர், மீண்டும், கடலே போல் நிரந்தர ஓய்வு கொண்டு விடவில்லை. காரணம் : ஒழுக்க நெறி நிற்பார் உறங்கச் சென்று விட்டனர் என்றாலும், பேயும், பேய் நிகர் மாந்தரும், அணங்குகளும், தங்கள் அழிவுச் செயல்களை ஆற்றுவான் வெளிப்பட்டுவிட்டனர். நம்புலவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர் அல்லர் ; அதனால், அணங்குகள், ஆவியுருவப் பேய்கள் பற்றிய விளக்கங்களைக் கூறத் தவறிவிட்டார். அதற்கு மாறுகத் தொட்டுத் தொடர்பு கொள்ளத் தகு இனமக்கள் குறித்து, அவர் மிகமிகத் தெளிவாக உணர்த்திருப்பதாகத் தெரிகிறது. தம் காலத்துக் கள்வர்களின் ஆடைவகைகள் அவர் கையாளும் படைக்கல வகைகளை, மிகவும் நுணுக்கமாக விளக்கியுள்ளார். அவற்றை அப்படியே மீண்டும் உருவாக்கும் வாய்ப்பினை வழங்குவது நம்மால் இயலாது. தற்காத்துக் கொள்ளவும், தாக்கவும் உதவும் படைக்கலங்களே அல்லாமல், அக்கொடியவர்கள், மாளிகைகளின் மேற்கூரைகளையும், மதில்களையும் ஏறி உட்புக நூலேணிகளையும் உடன் கெரண்டு செல்வர். என்றாலும், இரவின் ந க ர் க் கா வ ல், நனி மிகப் பெரிதாம் ஆதலின் அப்படைக்கலங்கள் பயன்படுவ அல்ல; தம் காலத்திய நகர்க் காவலர்தலைவர் பற்றிய, புலவர்