பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

13

'பிறங்குநில மாடத்து உறந்தை போக்கிக்,
கோயிலொடு குடிநீறிஇ,
வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறும் புதை நிறீஇ’

-பட்டினப்பாலை : 285.28.8

இப்பாட்டு, இளமைப் பருவம் தொட்டு நடைபெற்ற கரிகாலன் வெற்றிச் செயல்களை விளக்கிக் கூறுகிறது: தந்தை இறந்த பிறகு பிறந்த மகனாதலின், சோழ. அரியணையை, அவன் இடையூறுகள் இல்லாமல் அடைந்து: விட்டானல்லன் இளையவனாய் இருக்கும்போது, அடாவழியில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டவரால். அவன் சிறை செய்யப்பட்டான். அச்சிறையினின்றும்’ விடுதலைபெற அவன் போராடினான். புலவர் கூறுமாறு: ‘’கூரிய நகத்தினையும், வளைந்த வரிக்கோடுகளையும் உடைய புலிக்குட்டி, கூட்டிலே அடைபட்டிருந்து வளர்ந்தது போலப், பகைவர் இட்ட சிறையகத்தே இருந்து, தனக்குரிய அறிவு ஆண்மைக் குணங்களால் வயிரமரம் போல் முதிர்ந்து, குழியில் அகப்பட்டுக்கொண்ட நீண்ட கையினைக் கொண்ட ஒர் ஆண் யாண்ன, அக்குழியின் ஏறுதற்கரிய கரைகளைத் தன் கோட்டால் குத்திச் சரித்துக் குழியைத் தூர்த்துவிட்டு ஏறித், தன் பிடியோடு சேர்ந்து கொண்டதுபோல, சிறையினின்றும் வெளியேறி, வெற்றி கொண்டு அரியணையில் அடையும். வழிமுறைகளைப் பலகாலும் ஆராய்ந்து, அப்பகைவரின் அழிக்கலாகாத் திண்மை வாய்ந்த காவற் சிறை மதிலைக் கடந்து வெளிப்போந்து, வாள் கொண்டு போர் செய்து. வென்று, தன் அரச உரிமையை முறைப்படி அடைந்தான்.”

கூர் உகிர்க்
கொடுவரிக் குருளை, கூட்டுள் வளர்ந்தாங்குப்,
பிறர், பிணியகத்து இருந்து, பீடுகாழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக், குழிகொன்று,
பெருங்கை யானை, பிடி புக்காங்கு,