255
தமிழர் வரலாறு
நன்கலம், பொன் செய்பாவை, வைரமொடு"-அகம் : 127). நெடுஞ்சேரலாதன் குறித்த பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் பதிகத்தில். அக்கற்பனை மேலும் பலசெய்திகளைக் கொண்டதாகி அளவிலும் பெரிதாகி விட்டது. "அழகாக உருண்டோடி வரும் அருவிகளைக் கொண்ட இமையத்தே வில் பொறித்தான். அலை ஒலிக்கும் கடல்களை எல்லையாகக் கொண்ட தமிழகம் முழுவதும் தன் செங்கோல் செல ஆட்சி நடத்தினான். தக்க பெரிய புகழ் பெருக பெரிய புகழ் வாய்ந்த ஆரிய அரசர்களை வெற்றி கொண்டான். நயம் இலாச் சொல் வழங்கும் யவனர்களைச் சிறை கொண்டு, அவர்தம் கைகளைப் பின் புறமாகப் பிணித்து, அவர்தம் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்பால் இருந்த அரிய நன்கலன்களோடு வைரங்களையும் கைக்கொண்டான்" என்றெல்லாம் அது கூறுகிறது. புலவர்களின் கற்பனை வளம், வரலாற்றோடு வருந்தத் தக்க விளையாட்டை உண்மையில் விளையாடிவிட்டது.
"அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத், தகைகால் சிறப்பொடு
பேரிசை மரவின் ஆயர் வணக்கி, நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கைபின்கொளீஇ
52, 63, மற்றும் 368 எண்ணிட்ட புறநானூற்றுப் பாடல்களின் கொளுக்கள். அம்மூன்று பாடல்களும் ஒருவரோடொருவர் போரிட்டு, இருவருமே போர்க்களத்தில் உயிர்துறந்து போன சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும்,சோழன் வேற்பஃறடக்கைப் பெரு நற்கிள்ளிளையும் பாடுவனவாகக் கூறுகின்றன. இந்நெடுஞ்சேரலாதன், குட மாநிலம் ஆளும் அரசனாம் குடக்கோஎனப்படுவதால், இவன்,