பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

259



காரிபுக்க நேரார் புலம் போல்

கல்லென் றன்றால் ஊரே."
-நற்றிணை : 220 : 4 - 7.


காரி, முள்ளுர் மன்னன் என அழைக்கப்படுதல் போலவே, பெண்ணையாற்றை அடுத்த நிலப்பரப்பின் மன்னனாகவும் அழைக்கப்பட்டுள்ளான் - "பெண்ணையம் படப்பை-நாடு கிழவோனே !" (புறம் 126 : 23.) [முள்ளுர் பண்டை அருவா நாட்டின் தென் எல்லைக்கண் செஞ்சிக்கு அணித்தாக உளது] ஆகவே, அவனோடு போரிட்ட ஆரியர்கள் கி. பி. ஆறாம் நூற்றாண்டில், காஞ்சியைத் திரும்பப் பெற்றுக் கொண்டதன் பின்னர்த் தம் நாட்டு எல்லையை விரிவாக்க முயன்ற பல்லவர்களாதல் வேண்டும்.

பிறிதொரு உவமையில், "வெல்லும் வேற்படையினையும், மாரிபோல் சென்று பாயும் அம்புகளையும், மழை மேகம் போலும் தோலால் ஆன கிடுகிளையும் உடைய சோழர்க்கு உரிய, விற்படை மலிந்த காட்டரணைக் கொண்ட வல்லத்துக்குப் புறத்தே உள்ள காவற்காட்டின் கண் நடை பெற்றபோரில், தோற்று உடைந்து ஓடிப் போன ஆரியர் படைபோல், என் கைவளை உடைவதாக" எனக் கூறப்பட்டுள்ளான்.

"வென்வேல்,
மாரி அம்பின், மழைத்தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைக என்

நேரிறை முன்கை வீங்கிய வளையே,"
-அகம் : 336 , 19 - 23

ஈண்டுக் குறிப்பிடப்பட்ட ஆரியர்களும் பல்லவர்களே ஆதல் வேண்டும். தன் காவற்காடு தஞ்சையைக் காத்து நின்ற தான வல்லம், ஈண்டு முதன்முறையாகக் குறிப்பிடப்பட்டுளது. இவ்விரு இடங்களும், மிக விரைவில் முறையே