பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 தமிழர் வரலாறு

பிறந்த முத்து, கிழக்குக் கடலில் பிறந்த பவளம் : கங்கைச் சமவெளியிலிருந்து வந்த பொருள்கள்; காவிரியாற்றுப் பாய்ச்சலால் பெற்ற பல பண்டங்கள்; ஈழத்திலிருந்து வந்த உணவுப் பொருட்கள் : கடாரத்திலிருந்து வந்த கற்பூரம், பன்னீர், குங்குமப்பூ : மற்றும் அரிய பெரிய பண்டங்களைக் கொண்டிருப்பதே ஆம் :

                              "நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
                               காலின் வந்த கருங்கறி முடையும் 
                               வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், 
                               குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்,
                               தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்
                               கங்கை வாரியும், காவிரிப் பயனும், 
                               ஈழத்து உணவும்,  காழகத்து ஆக்கமும், 
                               அரியவும் பெரியவும் நெரிய சண்டி".
                                                           -பட்டிப்பாலை: 185 - 192 
    அந்நகரத்துத் தெருக்களில், பன்மொழி பேசும் மக்களைக் காணலாம் என்றும் பட்டினப்பாலை ஆசிரியர் கூறுகிறார். ("மொழிபல் பெருகி பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்து இனிய உறையும்" - 216,1217) ஆகவே, காவிரிப் பூம்பட்டினம், கரிகாலன் காலத்தில், வளங்கொழிக்கும் துறைமுகப் பட்டிணமாகத் திகழ்ந்தது என நம்பலாம்.

நகரத்தில் ஆரிய நாகரீகம்:

    இவ்வாணிகத்தின் தலையாய காரணத்தால் தமிழகத்தின் துறைமுக நகரத்திற்கும் வட இந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய போக்குவரத்து இருந்தது. ஆகவே, ஆரிய நாகரிகம், தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் பரவியதிலும் முன்னதாக இந்நகரில் பரவத் தொடங்கிவிட்டது பிற இடங்களில் பெறாத செல்வாக்கு பெற்று விட்டது. இப்பாட்டு அளிக்கும் சான்றுப்படி காவிரிப்பூம்பட்டினத்தில் புத்த, சமணப்பள்ளிகளும் ஒளிவீசும் சடை முடியுடைய ராகிய