கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்
387
‘’அனைத்து ஆசைகளையும் விட்டு, காமம், கோபம், மயக்கம் ஆகியவற்றின் நீங்கிய வாழ்வு நடத்துகின்றவன் பேரின்பப் பெருவாழ்வு அடைவான்‘’ என்கிறது. கீதை,
- “விஹாய காமான்யஹ் சர்வான் புமான்சரதி நித்ய ஸ் ஹ்
- நீர்மமொ நிரஹன்காரஹ் ஸ சாந்திமதி கச்சதி,‘’
‘’ஓர் அரசனுக்குத் தேவைப்படுவனவாகிய படை, குடிமக்கள், உணவு, அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு அங்கங்களையும் குறைவறக் கொண்டிருக்கும் அரசன், அரசர்களுளெல்லாம் ஆண்சிங்கம் போன்றவன் ஆவன்’ என்கிறது . குறள்:
- ‘’படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்
- உடையான் அரசருள் ஏறு.”
.
அர்த்த சாஸ்திரம், ஒரு நாட்டின் இன்றியமையா உறுப்புக்களாக, அரசன் உள்ளிட்டு ஆறு குறிப்பிடுகிறது: அரசன் நீங்கிய அந்த ஆறு அமைச்சு, நாடு, அரண், படை, தட்பு, உணவு இவையாம்.
- ‘’ஸ்வாம்ய மாத்ய ஜனபத துர்க கொஸ்தண்ட மித்ராணி‘’
எடுத்த வினையை முடித்தற்பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாதனவற்றைச் செய்வராயின், உலகத்தவர், அவற்றை ஏற்றுக்கொள்ளாது பழிப்பர். ஆகவே உலகம் பழிக்காதனவற்றை ஆராய்ந்து செய்தல் வேண்டும்? என்கிறது குறள்.
- “எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் : தம்மொடு
- கொள்ளாத கொள்ளாது உலகு‘’
.
“ஒரு பணியைத் தொடங்கும் முன்னர், அப்பணியின் திட்டம், அதைச் செயலாற்றும் செயல்முறை ஆகியவற்றை