பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 தமிழர் வரலாறு

திரிலோசனனாலும், மற்றும் பிற அரசர்களாலும் செய்து முடிக்கப்பட்டது என்ற உண்மையான சான்றுகளைக் கொண்டுள்ளன. திரிலோசனன், திரிநேத்திரன், திருநயணன், முக்கண்டி, என்பவை பல்லவ என்ற பின் இணைப்போடு, தெலுங்குக் கல்வெட்டுகளில் பெருமளவில் காணப்படும், ஒரு பொருள்குறிக்கும் பல சொற்களாம். (Ep. Ind. Wol. X1 P. 340.) பல்லவர் வரலாறு, தனித்து உணரத்தக்க, மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கத் தக்கதாம். 1) காஞ்சியைத் தலைநகராகவும், கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள தனகடகத்தை இரண்டாம் தலைநகராகவும், கொண்டு ஆண்ட வேதச் சடங்குகளைப் பேணி வளர்த்த, தங்கள் அரச ஆவணப்பட்டயங்களைப், பிராகிருத மொழியில் வெளியிட்ட, சமுத்திர குப்தனின் அலகாபாத் ப்ரலஸ்தி’ (Prasasti) யில், குறிப்பிடப்பட்டுள்ளவாறு, விஷ்ணுகோபன் என்பான் ஒருவன், ஆட்சி புரிந்திருந்த கி. பி. 850இல், தங்கள் ஆட்சி அழிநிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட பல்லவர் காலம், 2) தங்களுள் ஒருசிலர் வெறும் பெயரளவில் மட்டுமே காஞ்சித் தலைவர்களாக இருந்த, காஞ்சியில் அல்லாமல் கிழக்குக் கடற்கரைக்கண் உள்ள தெலுங்கு மாவட்டங்களி லிருந்து கொண்டு தங்கள் பட்டயங்களைச் சமஸ்கிருதத்தில் வெளியிட்ட, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த பல்லவர்கள், 3) மீண்டும் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த, சம்ஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமான பட்டயங் களைக் கொண்ட, எண்ணற்ற கோயில்களைக் கட்டிய, கி. பி. 600க்கு முன்பே, தமிழர்களோடு இரண்டற ஒன்றுபட்டு விட்ட பல்லவர். இப்பல்லவர்கள், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து, ஒ ன் ப. தாம் நூற்றாண்டின் இறுதிவரை சிறப்புற்றிருந்தனர். இரண்டாவது காலகட்டம், அதாவது, நான்காம் நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையான காலகட்டந்தான், காஞ்சிமீது, பல்லவர்களுக்கு அதிகாரப் பிடிப்பு இல்லாத காலம் அவர்களைக் காஞ்சியிலிருந்து துரத்தியவன், பெரும்பாலும், கரிகாலன்