பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழா் வரலாறு 38

கோபுரத்தைப் பொன் தகடுகளால் மூடினான் என்பதே, பெரும்பாலும் பொருளாகும். இக்கோயில், தென்னிந்தியாவில் ஆகம வழிக் கடவுள்களுக்குக் கட்டப்பட்ட கோயில்களில் ‘முதல்கோயில் ஆதல்கூடும். தென்னிந்தியக் கல்வெட்டுகளில்

கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை பதிவுபெற்ற பழங் கோயில், கூளி மஹாதாரக தேவ குல (கோயில்)த்துப், பகவான் நாராயணனுக்குக் கட்டி, அளிக்கப்பட்ட, தாலூரத்தில் உள்ள கோயிலாம் (Ep. Ind: Will P. 143) இக்கல்வெட்டு, பெரும்பாலும், கி பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காஞ்சீபுரத்தில் எண்ணற்ற கோயில்கள், விஷ்ணுவுக்கு-பெரும்பாலும் சிவனுக்கும் கூட கட்டப்படுமளவு, காஞ்சீபுர மாவட்டம் அப்பழைய பல்லவர் காலத்திலேயே ஆரிய மயமாக்கப்படுவது, தெளிவுறத் தெரியுமளவு முழுமை பெற்றுவிட்டது. கரிகாலன் பொன் வேய்ந்த கோயில், சிவன் கோயிலா, விஷ்ணு கோயிலா என்பதை உறுதி செய்ய எந்த வழியும் இல்லை:

கரிகாலன் வாழ்க்கை ஆற்றிய பெரும்பணிகள் பற்றி இதுகாறும் கூறியவை, அவன் காலப் புலவர்களாலும், அவன் காலம் தொட்டு வழங்கி வந்து, பின்னர் எண்ணற்ற கல்வெட்டுக்களில் இடம்பெற்றுவிட்ட மரபுவழிச் செய்தி களாலும் உறுதி செய்யப்பட்டனவாம். இனி, பிற்காலப் புலவர்கள் கூறிய செய்தி விளக்கங்கள், கரிகாவன் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராய பரனர், அகநானூற்றில் தொகுக்கப்பட்ட ஒரு செய்யுளில், அவ்வரசன், வெண்ணியில் மேற்கொண்ட முதல் போரை விளக்கி, இவ்வாறு கூறுகிறார். கடும்சினமும் பெருவலியும் வாய்ந்த பெரிய புகழ் வாய்ந்த கரிகாலன், போர் ஆரவாரம் மிக்க கள்வளம் வாய்ந்த வெண்ணிவாயில் என்ற இடத்தில், சிறப்பு வாய்ந்த பகையரசர்கள் படைகொண்டுவந்து போரிட்ட களத்தில், பேரொலி எழுப்பும் அவர்களின் வீரமுரசும் அழிய வேளிர் குலத்தலைவர்கள் ப்தினொருவருடன் இரண்டு பெருவேந்தர் களையும் அழித்தனன்.