பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

483


யிலும் ஆய்ச்சியர் குரவையிலும் இடம்பெற்றிருப்பவை: ஆகவே, அவற்றை அகச்சான்றுகளாக ஏற்க திரு. அய்யங்கார் அவர்கள் மறுக்க மாட்டார். ஆக பாண்டியர் குலத்து வந்தான் ஒருவன், இமயத்தே கயல் பொறித்ததை இல்லை என மறுக்கும் வலுவான சான்று எதுவும் இல்லாத நிலையில், மேலே கூறிய அகச் சான்றுகளின் அடிப்படையில், இமயத்தே கயல் பொறித்தது உண்மையொடுபட்ட நிகழ்ச்சியே என்பது உறுதி ஆகிறது.