பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தமிழர் வரலாறு 40

களத்தில் கைவிட்டுவிட்டு ஓடிவிட்ட பெருமையில்லாத அரசர்கள்": -
               ‘பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
                சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற,
                ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
                பீடில் மன்னர்’,
                                       -அகநாலுiறு : 1.25,18-21

வாகை எனும் சொல், ஒரு மலரையும் குறிக்கும். ஒர் இடத்தையும் குறிக்கும் ஆகவே, சூடும் வாகைமலரின் வேறுபடுத்தி, வாகை எனும் இடத்தை உணர்த்த, சூடாவாகைக் என்ற சிலேடை வழங்கப்பட்டுளது.

காிகாலன் பற்றிய பழங்கதைகள் :

காலப்போக்கில், நம்புதற்கியலாப் பல கட்டுக் கதைகள், கரிகாலன் பெயரை வளைத்துக் கொண்டு, இலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டன. கரிகாலன் இறப்பிற்குப் பின்னர், (எவ்வளவு காலத்திற்குப் பின்னர் என்பது சொல்ல இயலாது) இயற்றப்பட்ட, கணக்கிலாக்கட்டுக் கதைகளின் களஞ்சிய மான சிலப்பதிகாரக் காப்பியம், இந்திர விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின்போது, காவிரிப்பூம்பட்டினத்துக் கடவுள்களுக்குப் பலிகொடுக்கும் பல்வேறு இடங்களுள், கொற்றப்பந்தர் பட்டிமண்டபம், தோரணவாயில் ஆகியன வைக்கப்பட்டிருந்த இடங்களை விளக்கிக் கூறுகிறது. இப்பகுதி நம்புதற்கியலா வெற்றிச் செயல்கள் சிலவற்றைக், கரிகாலனுக்கு ஏற்றிக் கூறுவதால், அஃது. ஈண்டு எடுத்துக் காட்டப்படுகிறது. "பரந்த இவ்வுலகில், தன்னோடு எதிர்த்துப் போரிடும் அரசர் எவரும் இலராகவே, போர் ஆர்வம் மிக்க திருமாவளவன். வாள், குடை மயிர் நீக்காத் தோல் போர்த்த முரசுகளோடு நல்ல நாளில், தலைநகரின் நீங்கி, வடதிசைக்கண், எதிர்க்க வல்ல பகை வரைப் பெறலாம் என்ற வேட்கையால், வடநாடு நோக்கிச் சென்ற