பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

தமிழர் வரலாறு


கூறப்படும் பெரும்பாலானவற்றிற்குத் தென் இந்தியா, மூலமாக இருந்து வந்துளது. இடையற்றுப் போகாத தொடர்ந்து வளர்ந்துவந்த இந்திய வரலாற்றில், தமிழர் ஆற்றிய முக்கிய பணி பிழையின்றி உணர்ந்துகொள்ளப் பட்டால்தான் அக்கால கட்டங்களில், தென்இந்தியா, தனியே நின்று, தனக்குத்தானே தனி உழவு செய்து கொண்டிருக்கவில்லை; மாறாக, பாரதவர்ஷத்தின் ஏனைய பகுதிகட்கும் இடையறாது பாயும் அறிவியல், கலை மற்றும் சமயங்களாம். உயிர்ப்புநீர் சுரக்கும் வற்றாத ஊற்றாகவே இருந்து வந்துளது என்ற உண்மையை உணர்ந்துகொண்டால்தான், இந்திய வரலாற்றினை உண்மை நிலையில் நிறுத்தியதாகும்.