பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

51


கரிகாலன் காலத்துப் புலவர்கள் பாடிய பாக்களுக்கும், சிலப்பதிகாரத்துக்கும் இடையில், அதிகம் இல்லை என்றாலும், குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாவது கடந்திருக்க வேண்டும். முன்னவற்றில், சமஸ்கிருதச் சொற்கள் அருகியே ஆளப்பட்டிருக்கும். பின்னதில், அவற்றின்ஆட்சி வழக்கமாகி விட்டது. முன்னவற்றில், ஆரியக் கருத்துக்கள் பற்றி, ஒரு சில குறிப்புகளே உள்ளன. அவையும், ஆரிய நாகரீகம். தமிழர் வாழ்வில் ஊடுறுவவில்லை என்பதை உணர்த்திவிடும்: சிலப்பதிகாரத்தில், விளக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை, அதற்கு மாறாக, முழுக்க முழுக்க ஆரியக் கருத்துக்களாலும், ஆரியச் சமயக் கொள்கைகளாலும் ஊடுறுவப்பட்டிருக்கும், அடிக்கொருதரம் எனப் பரவலாகக் கூறப்பட்டிருக்கும், இசை, நாடகம், நாட்டியம், மற்றும் கற்பனைக் கதைகள் அனைத்துமே ஆரியத் தன்மை வாய்ந்தன. இலக்கியத் திறனாய்வுத் துறையில் ஒரளவே பயிற்சி பெற்றவரும் கூட, சிலப்பதிகாரக் காப்பியம், தமிழர் சிந்தனைகள், ஆரிய நாகரீகத்தோடு கலப்பதற்கு இனி இடமில்லை எனக்கூறுமளவு இரண்டறக் கலந்துவிட்ட காலத்தைச் சேர்ந்தது. ஆனால், கரிகாலனைப் பற்றிய, அவன் காலப் பாடல்கள், தமிழ்நாடு ஆரியமயமாக்கப்படுவதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளத் தவறமாட்டார்.

கரிகாலன் காலம் : கஜபாகு, சம காலத்தன் :

மேலும், கஜபாகுவைச், செங்குட்குவன் சம காலத்தவனாகக் கொள்வது, மிகவும் வலுவற்ற அடிப்படை மீது அமைந்துளது: சிலப்பதிகாரக் கயவாகுவை, மகாவம்ச முதலாம் கஜபாகுவாகக் கொள்வது பற்றித் திருவாளர் ஹல்ட்ஸ் (Hawltsch) என்பார், "திரு. குமாரசாமி அவர்களின் மதிநலத்திற்கு மதிப்பளிக்கும் அதே நிலையில், இரண்டு” கஜபாகுகளையும் அடையாளம் காட்டுவது, வெறும் பெயர்” ஒற்றுமையால் மட்டுமே உறுதி செய்யப்படாமல், அகச்சான்றுகளாலும் உறுதி செய்யப்படும் வரையும், இலங்கையின் பண்டைய வரலாற்றுக் கால வரிசைப்பட்டியல், நுண்ணிய-