பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 79

எய்திய மாதவி" என்றும், கரிகாலன் பெயர் கூறியே பாடியிருப்பர். "சூழ் கழல் மன்னர்க்குக் காட்டல் வேண்டி,” (அரங்கேற்று காதை: 11) என்றும், "காவல் வேந்தன்”, "தலைக்கோல் எய்தி” (டிெ : 158.161) என்றும், "வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர் மேனி மாதவி" (அடைக்கலக் காதை : 21-22) என்றும் வேறு வேறு தொடர் வாய்பாட்டால் கூறியிருக்க மாட்டார். ஆகவே, மாதவி அரங்கேறிப் பரிசு பெற்றது கரிகாலன் அவையில் அன்று; அக்காலை அரசாண்டிருந்த வேறு ஒரு சோழன் அவையில் தான், ஆகவே, அத்தொடர்களில் வரும் "சூழ் கழல் மன்னன்". "காவல் வேந்தன்”, "வேந்து" என்ற சொற்களுக்குக் "கரிகாலன்" என் உரையாசிரியர்கள் பொருள் கொண்டது பொருந்தாது.

  தம்மைக் காணும் ஆடவர் உயிரைக் கவர்ந்து கொள்ளும் பேரழகு வாய்ந்தவர் புகார் நகரத்துப் பெண்டிர் என்ற அம் மாநகரத்து மகளிர் நலம் பாட வந்த இளங்கோவடிகளார், மக்கள் உயிரைக் கவரும் தன் தொழிலைப் புகார் நகரத்தே ஆற்ற முடியாது அப்புகார் நகரத்து மன்னனுக்கு அஞ்சிய கூற்றுவன், தன் ஆண் உருவைக் கைவிட்டுப் பெண் உருக் கொண்டு உலாவருகிறான் போலும் "மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப், பல்லுயிர் பருகும் பகுவாய் கூற்றில் ஆண்மையில் திரிந்து...பெண்மையில் திரியும்" (இந்திர விழவூர் எடுத்த காதை 218-223) என்ற பகுதி, எவ்வாறு புகார் நகரத்துப் பெருமையைப் பொதுவாகப் பாராட்ட வந்ததோ அது போன்றதே, சோழப் பெருநாட்டை ஆளும் அரசனுக்கு, வளங்கொழிக்கும் பெருநகரமாம் புகார் நகரின் வளப் பெருக்கத்தை உணர்த்த திருமகளே அந்நகருள் புகுந்து விட்டாள் என்ற பொருள்பட வரும் "இரு நில மன்னர்க்குப் பெருவளம் காட்டத், திருமகள் புகுந்தது இச்செழும்பதி’ (இந்திரவிழவூர் எடுத்த காதை : 212-213) என்ற வரிகளும் ஆதலின், அத்தொடரில் இடம் பெற்றிருக்கும் "மன்ன்ன்” என்ற சொல்லுக்கு அடி யார்க்கு நல்லார் "கரிகாலன்" எனப் பொருள் கொண்டதும் பொருந்தாது; -- -