பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

91


கிள்ளி என்னும் சோழமன்னன் காலத்தில் நிகழ்ந்ததென்று மணிமேகலை கூறும். அப்போது அந்நகரில் இருந்த மாடங்கள், கோயில்கள், கோட்டங்கள் எல்லாம் அழிந்தொழிந்தன. மாடமாளிகையை இழந்த மன்னன் அந்நகரினின்றும் வெளியேறிய செய்தியை இரக்கத்தோடு கூறுகின்றார் மணிமேகலையாசிரியர் :

"விரிதிரை வந்து வியன்நகர் விழுங்க ஒருதனி
போயினன் உலக மன்னவன்"

என்னும் மணிமேகலை அடிகளில் சோகம் நிறைந்திருக்கிறது. 'துன்பம் வந்துற்றபோது துணையாவார் யாருமின்றித் தன்னந் தனியனாய் அந்நகரினின்றும் வெளிப்போந்தான் மன்னர் மன்னன்' என்பது அவ்வடிகளின் கருத்து.

இவ்வாறு அழிந்ததாக மணிமேகலையிற் சொல்லப்படுகின்ற காவிரிப்பூம்பட்டினம் ஏழாம் நூற்றாண்டில் எழுந்த தேவாரப் பாசுரத்தில் ஒரு சிற்றுாராகக் குறிக்கப்படுகின்றது; சிலப்பதிகாரத்திற்கும் தேவாரத்திற்கும் இடைப்பட்ட ஐந்நூறு ஆண்டுகளில் சோழ மன்னர் தம் நிலையில் தாழ்ந்தனர். காஞ்சி புரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாளத் தலைப்பட்ட பல்லவர்கள் சோழ நாட்டிலும் ஆணை செலுத்தினர். பழம்பெருமையெல்லாம் இழந்து நின்ற காவிரிப்பூம்பட்டினத்தில் அன்புகொண்டு ஒரு பல்லவன் அங்குச் சிவாலயம் கட்டினான்; அதற்குப் பல்லவனீச்சரம் என்று பெயரிட்டான். பல்லவன் கட்டிய ஈசன் கோயிலாதலின், அது பல்லவனீச்சரம் என்று பெயர் பெற்றது. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் காலத்தில் பல்லவனீச்சரம் அவ்