பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. மாதரும் மலர்ப் பொய்கையும்

மலர் நிறைந்த பொய்கையும் மீன் நிறைந்த வானமும் எஞ்ஞான்றும் கவிஞர் மனத்தைக் கவரும் இயற்கைக் காட்சிகளாகும். காலையிலே தோன்றும் கதிரவனொளியால் களித்து விரியும் கமல மலரைக் காணும்பொழுது கவிஞரின் உள்ளமும் மலர்வதாகும். இத்தகைய இயற்கை அழகினை மாந்தி இன்புற்ற கவிஞர் தரும் காட்சிகளைப் பார்ப்போம்.

நீலத்திரை விரித்த வானத்திலே, கதிரவன் ஒளி வீசி எழுந்தான். கண்களைக் கவரும் அழகு வாய்ந்த கமல மலர்களில் கள்ளுண்டு களிக்கப் போந்த கரு வண்டுகள் பொய்கையின்மீது சுற்றிச் சுழன்று இன்னிசை பாடின. பகலவன் ஒளியால் இதழ் விரிந்து இலங்கிய செங்கமல மலரில் வெள்ளை அன்னம் ஒன்று இனிதமர்ந்திருந்தது. காலைப் பொழுதில் வீசிய இளங்காற்றின் இனிமையை நுகர்ந்து அன்னம் தெள்ளிய திரைகள் தாலாட்டக் கமலப் பள்ளியில் இனிது துயின்றது. இவ்வாறு பூஞ்சேக்கையில் கண்வளர்ந்த அன்னத்தின் அழகினை,

"தாய்தன் கையின் மெல்லத்
தண்ணென் குறங்கி னெறிய
வாய்பொன் அமளித் துஞ்சும்