பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தமிழ் இன்பம்


பாடி வந்த பரிசிலன் வாடிப் பெயர்தல் நாடிழந்ததனினும் இன்னாதென்றெண்ணி, தன் தலையைக் கொய்து உன்னிடம் கொடுக்குமாறு இவ்வாளைத் தந்தான்' என்று கவிஞர் கல்லும் கரைந்துருகும் கனிந்த மொழிகளைக் கூறிய பொழுது, அமணனது உள்ளம் நெகிழ்ந்தது; கண்கள் பாசத்தால் நேசத் தாரைகள் சொரிய நின்றான்; தலையாய வள்ளலைக் கானகத்தில் வருந்த வைத்த தன் சிறுமையை எண்ணி ஏங்கினான்; அப்பொழுது நால்வகைச் சேனையோடும் நகர மக்களோடும் தமையன் வசித்த கானகம் போந்து, அப்பெருந்தகையின் அடிபணிந்து, மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்தான். குமணனும் முன்போலவே அறிஞர்க்கும் வறிஞர்க்கும் ஆதரவாய் அமைந்து என்றும் அழியாத பெரும் புகழ் எய்தினான்.